சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்பைடையில் கடந்த வருடம் ஜூன் மாதம் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டிற்கு மேலாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் இவர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதோடு வழக்கு சம்பந்தப்பட்ட வேறு கோரிக்கை மனுவையும் வழங்கியிருந்தார்.வழக்கை தாமதப்படுத்துவதற்காகவே செந்தில் பாலாஜி தரப்பு இப்படி செய்து வருகிறது என நீதிபதி முன்னர் அமாலாக்காத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன்படி இன்று செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தது. இந்நிலையில் நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் செந்தில் பாலாஜியின் மீதான குற்றச்சாட்டுப்பதிவு இன்று இல்லை என சொல்லப்பட்டது.
உடல்நிலை குறைவு காரணமாக ஆஜராக முடியவில்லை எனவும், அதோடு விடுவிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் சொல்லப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு குறித்த நடைமுறை இன்று கிடையாது என நீதிமன்றம் அறிவித்தது.
உடல் நிலை குறைவின் காரணமாக செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிட்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…