சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா. தனது அபார பந்துவீச்சின் மூலம் எதிரணியை திணறடிக்க செய்வதில் பும்ரா கைத்தேர்ந்தவர். கிரிக்கெட் அரங்கில் பல முன்னணி வீரர்கள், வல்லுநர்கள் அவ்வப்போது பும்ராவை புகழ்வது புதிதல்ல.
இந்த வரிசையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய வீரர் பும்ராவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசும் போது, சிமென்ட் பிட்ச்களில் கூட எதிரணி வீரர்களை மிரட்டும் அளவுக்கு பும்ரா சிறப்பானவர் என்று பசித் அலி தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகன் விருது வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சிமென்ட் பிட்ச்-இல் பும்ராவை பந்துவீச செய்தால் கூட, அவரது வித்தியாசமான உடல்மொழி பேட்டர்களை நிலைகுலைய செய்யும். இதுதான் நிதர்சனம். மற்ற பந்துவீச்சாளர்களால் இது முடியாது. அவர்களுக்கு இவ்வாறு செய்ய ஃபார்ம் மற்றும் ரிதம் அவசியம் தேவைப்படும்.”
“அவர் வருவார், விக்கெட் எடுப்பார், இதைத் தொடர்ந்து அடுத்த ஸ்பெல்-இல் மூன்று விக்கெட்டுகளை சாய்ப்பார். அவர் பேட்டர்களை எந்த விஷயத்திலும் கணிக்க முடியாத அளவுக்கு செயல்படுபவர்.”
“அவர் வீசும் ஸ்லோ பந்துகள் மிகவும் கச்சிதமாக இருக்கும். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வீசும் வகையிலான பந்துகளை கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்டவர். அவர் மிகவும் ஸ்பெஷல்,” என்று யூடியூப் சேனலில் பேசிய பசித் அலி தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…