பொங்கி எழுமா பாகிஸ்தான்!…இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க போகுதா இங்கிலாந்து?…

சமீபத்தில் கத்துக் குட்டி அணியான பங்களாதேஷிடம் உதை வாங்கி இருந்தது டெஸ்ட் மேட்சில் பாகிஸ்தான் அணி. யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாற்றில் நடக்கும் என. சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது அந்த அணி.

உலகில் பிற கிரிக்கெட் அ|ணிகளை தனது அபாரமான பந்து வீச்சால் கட்டுப்படுத்தி வைத்திருந்த பாகிஸ்தான் அண,  இப்போது உலகத் தரமிக்க வீரர்களை தேடி அலையும் நிலை உருவாகி விட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பந்து வீச்சாளர்களைப் போலவே, பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி எதிரணியை திணறடிக்கச் செய்த காலமும் இருந்து வந்தது. இம்ரான் கான், ஜாவீத் மியான்தத், சயீத் அன்வர், இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக், சாஹீத் அஃபிரிடி, யூசுஃப் யுஹானா, யூனிஸ் கான் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இந்த அணியில் விளையாடிய நேரத்தில் அவ்வளவு எளிதாக எதிரணி வென்று விட முடியாது என்ற நிலை இருந்து வந்தது. உலக சாம்பியன் பட்டத்தை ஐம்பது ஓவர் போட்டியிலும், இருபது ஓவர் போட்டியிலும் வென்றுள்ளது அந்த அணி.

சமீப நாட்களாகவே பாகிஸ்தான் அணி சரிவை மட்டுமே சந்தித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. பாபர் அசாம், முகம்மது ரிஸ்வான், ஷாகின் அஃபிரிடி போன்ற தரமிக்க வீரர்கள் அணியில் இடம் பிடித்திருந்த போதிலும், தொடர் வெற்றி என்பது அந்த அணிக்கு எட்டாக் கனியாக மாறி வருகிறது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் வைத்து நடந்து முடிந்தது. முதல் இன்னிங்ஸில் ஐனூறு ரன்களை கடந்த போதிலும் மோசமான தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற சாதனையை படைத்திருந்தது பாகிஸ்தான் அணி.

Test Match

இந்த நிலையில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது.

முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அறுபத்தி மூன்று ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் நூற்றி எழுபத்தி எட்டு ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது பாகிஸ்தான்.

அந்த அணியின் சயிம் ஆயூப் எழுபத்தி ஏழு ரன்களை எடுத்து அவுட் ஆனார், கம்ரான் குலாம் எழுபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் இரண்டு விக்கெட்டுகளையும், மேத்தியூ போட்ஸ், கார்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்திருந்தனர்.

சொந்த மண்ணில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எழுச்சி பெறுமா?, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து அந்த அணியை வெல்லுமா? அல்லது தனது பலத்தை முதல் போட்டியில் நிரூபித்த இங்கிலாந்து தன் இஷ்டத்திற்கு பாகிஸ்தானை பந்தாடுமா? என்பது போட்டியின் அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.

sankar sundar

Recent Posts

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

2 hours ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

3 hours ago