இந்திய போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ் எதுவும் வந்தால் அதை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்த தளத்தில் தங்களின் முகவரியை பதிவு செய்வது வழக்கம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை வங்கி கணக்கில் இருந்து நேரடியாக அல்லது யுபிஐ, பேடிஎம், கூகுள் பே போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்துகிறார்கள்.
இந்த வாடிக்கையாளர்களை குறி வைத்து தற்போது ஒரு புது மோசடி நடைபெற்று வருகின்றது. அவர்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் வலை வீசலாம். வங்கிகள் அனுப்பும் otp போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இந்திய போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட செல்போன்களுக்கும் இமெயில் முகவரிக்கும், மோசடி கும்பல் சில எஸ்எம்எஸ்களை அனுப்பி வருகின்றது.
இந்திய போஸ்ட் பெயரில் வரும் அந்த எஸ்எம்எஸ் தகவலில் உங்கள் பார்சல் குடோனுக்கு வந்துவிட்டது. டெலிவரி செய்வதற்கு முயற்சி செய்தும், ஆனால் முகவரி முழுமையாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை. பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க உங்கள் முகவரியை 48 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லிங்கை கிளிக் செய்தால் இந்திய போஸ்ட் இணையதளம் என்று இணையம் ஓபன் ஆகின்றது. இந்த முகவரியை அப்டேட் செய்யும்படி கேட்கின்றது. எந்த பொருளும் ஆர்டர் செய்யாத நபர்களுக்கு இதுபோன்ற தகவல் வந்துள்ளது. இதை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது இது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இது போன்ற எஸ்எம்எஸ் வந்தால் அல்லது ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யும்படி கூறினால் அதை செய்ய வேண்டாம். இது குறித்து உடனே காவல்துறைக்கு புகார் கொடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…