தந்தையும் மகனும் கைகோர்த்தப்படியே சென்று ரயிலின் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மும்பையில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாயந்தர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதாவது திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பார்ம் ஒன்றில் தந்தையும் மகனும் கைகோர்த்து படி நடந்து சென்றனர். அப்போது அந்த பிளாட்பார்மில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் டிரக்கில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அந்த வழியாக உள்ளூர் ரயில் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் திடீரென்று அந்த ரயில் முன் கைகோர்த்த படி கீழே அமர்ந்து விட்டனர். ரயில் மிகவும் அருகில் இருந்ததால் ரயிலை நிறுத்த முடியாமல் ரயில் அவர்கள் மீது ஏறியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில் உயிரிழந்தவர்கள் நலசோபாரா பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித் மேத்தா என்பவரும் அவரது மகன் ஜே மேத்தா என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் பிளாட்பார்மில் நடந்து சென்று டிரக்கில் இறங்கி கைகோர்த்தபடி ரயில் முன் அமர்வதும் பின்னர் அவர்கள் மீது ரயில் ஏறுவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கின்றது. இந்த காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…