ஒரே பெண்ணை இருவர் காதலிக்கும்போது சில சமயங்களில் அங்கு விபரீதமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படி, 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தஞ்சாவூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள மேலத்துக்குறிச்சி பகுதியில் கடந்த 24ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட ஒரு சிறுவனின் உடல் கிடப்பதாக சுவாமி மலை காவதுறையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த உடலை கைப்பற்றி அவர் யார்?. அவரை கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், அவர் மூப்பக்கோவில் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுவன் தாமோதரன் என்பது தெரிய வந்தது. அதன்பின் அந்த பகுதியில் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சிறுவன் தமிழரசன்(19) அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் அந்த சிறுமி தாமோதரனை காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தமிழரசன் தாமோதரனை அழைத்து அந்த பெண்ணை காதலிக்கக் கூடாது என சொல்லி இருக்கிறார். ஆனால், தாமோதரன் அதை ஏற்கவில்லை. எனவே அவரை கொலை செய்வது என தமிழரசன் முடிவெத்தார்.
கடந்த 24ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து தமிழரசனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து எல்லோரும் மது அருந்தி இருக்கிறார்கள். அப்போதும், தாமதரன் அந்த பெண்ணை காதலிப்பதை விட மாட்டேன் என சொல்ல கோபமடைந்த தமிழரசன் அவரின் 3 நண்பர்களுடன் சேர்ந்து தமோதரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து வயல் பகுதியில் வீசி விட்டு சென்றுவிட்டார். தற்போது தமிழரசன் மற்றும் அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…