Categories: latest newstamilnadu

கடன கட்ட போறீங்களா, இல்லையா…? மிரட்டல் விடுத்த நிதிநிறுவனம்… தாயும் மகனும் செய்த செயல்…!

தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர் கடனை திருப்பி செலுத்த கோரி மிரட்டிய காரணத்தினால் தாயும் மகனும் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

வேலூர் மாவட்டம், ஏரிகுத்தி மேடு என்ற பகுதியைச் சேர்ந்த அன்சார் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவரின் மனைவி மும்தாஜ். இந்த தம்பதிகளுக்கு நஸ்ரின் சபிஹார் என இரண்டு மகள்களும், இம்ரான் என்ற மகனும் இருக்கின்றார். இந்த மூவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இம்ரான் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி 2 1/2 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது அவரின் மனைவி ஹர்ஷியாமா 5 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். அன்சார் அவரது மனைவி மும்தாஜ் ஆகிய இருவரும் பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் மற்றும் மகளிர் குழுக்களில் என்று 28 லட்சமும், தனியார் நிதி நிறுவனத்தில் 2,20,000 கடனாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்த கடனை அடைப்பதற்காக உள்ளூர் பைனான்ஸ்களில் கடன் வாங்கி செலுத்தி வந்திருக்கிறார்கள்.

அதிக அளவு கடந்தால் மிகுந்த அவதிப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மும்தாஜ் இம்ரான் இருவரும் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர். இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் அன்சரின் வீட்டிற்கு சென்று கடனை திரும்ப செலுத்த கோரி மிரட்டி இருக்கின்றார். இதனால் பயந்து போன அவர் வெளியில் சென்று விட்டார். இம்ரானின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் கடனை திரும்ப செலுத்தக் கோரி கதவை தட்டியபோது அவமானம் அடைந்த மும்தாஜ் மற்றும் மகன் இம்ரான் இருவரும் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இம்ரான் மற்றும் அவரின் தாயார் மும்தாஜ் கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்பா அன்சர் எல்லா இடங்களிலும் எங்களை காட்டி கடன் வாங்கி வைத்திருக்கின்றார். கடனை கட்ட முடியாமலும் கடனை திருப்பி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் தவித்து வருகிறோம் என்று வீடியோ பதிவிட்டு அதனை உறவினர்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

40 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago