Categories: Cricketlatest news

கம்பீரால் நான்கு ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்க முடியாது… தோனியின் நம்பிக்கை நட்சத்திரம் சொல்லும் சேதி!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கௌதம் கம்பீரால் பயிற்சியாளராக நான்கு ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என முன்னாள் உலகக்கோப்பை அணியின் பிரபலம் சொல்லியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாகவே கம்பீர் தன் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். யார் அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது? என எதையும் யோசிக்காமல் தோன்றிய விஷயத்தை ஓபன் ஆக மீடியாக்களில் நிறைய முறை பேசி ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அவர் முதலில் பயிற்சியாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் என்றதும் இந்திய ரசிகர்கள் துணுக்குற்றனர்.

இதற்கு காரணம் கௌதம் கம்பீர் கறாரான ஆள் மட்டுமல்ல கொஞ்சம் திமிர் பிடித்தவர் தான். தனக்கு பிடிக்காதவர்களை அப்படியே ஒதுக்கி விடுவார். அதுபோல அவர் நினைப்பதுதான் நடக்க வேண்டும் எனவும் பிடிவாதம் பிடிப்பார். இதனால் இந்திய அணியின் அனுபவ வீரர்களுக்குள் பிரச்சினை ஏற்படும் எனவும் இந்திய ரசிகர்கள் நினைத்தனர்.

இந்நிலையில் தோனியின் தலைமையில் விளையாடிய உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தார் ஜோகிந்தர் சர்மா கம்பீரின் எண்ட்ரி குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,  கம்பீர் இந்திய அணியின் வெற்றிக்கு தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அவரால் இந்திய அணியில் நான்கு வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது. பொதுவாக அவருக்கு எதையும் அளவில் வைத்து பேசும் பழக்கம் கிடையாது. அவர் ஒரு முடிவை எடுத்து அதை செயல்படுத்த நினைப்பார். இது பல வீரர்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்கும். விராட் கோலி பற்றி கூறவில்லை. பெரும்பாலும் எல்லா வீரர்களுக்கும் கம்பீர் சொல்வது எதிராகத்தான் இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஜோகிந்தர் ஷர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஜோதிடர் ஷர்மா தற்போது காவல்துறையில் உயரிய பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

AKHILAN

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

12 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

12 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

13 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

21 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

21 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

22 hours ago