இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது இந்தியா. இரு அணிகளுக்கும் இடையே முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி நடந்து முடிந்தது. எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஒரு ரன் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிரடியாக ஆட நினைத்து முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது மட்டுமல்லாமல் போட்டி சமனடைய காரணமாக மாறினார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் கொழும்பு பிரமதாஸா மைதானத்தில் வைத்து இந்திய நேரப்படி மதியம் இரண்டு முப்பது மனிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தர வரிசையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் முன்னாள் உலக சாம்பியனான இலங்கை அணியின் தற்போதைய ஆட்டம் கத்துக் குட்டி அணிகள் ஆடுவது போல இருந்து வருகிறது.
இருபது ஓவர் உலகக் கோப்பை, ஜிம்பாப்வே அணியுடனானை இருபது ஓவர் போட்டி தொடர், இலங்கையுடனான இருபது ஓவர் போட்டி தொடர் வெற்றி என அடுத்தடுத்து சாதனைகளை புரிந்து வரும் இந்திய வீரர்கள் முதல் போட்டியில் தங்களது முழுத் திறமையையும் காட்டத் தவறியதால் தான் போட்டி சமனில் முடிந்ததாக விமர்சனங்கள் இருந்து வருகிறது.
அதோடு மட்மல்லாமல் மூன்று போட்டிகளை மட்டுமே கொண்ட தொடர் என்பதால் இன்று வெற்றி பெறும் அணி முன்னிலை பெறும்.
இதனால் இன்றைய இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 2011ம் ஆண்டு இந்தியாவில் வைத்து இதே இலங்கை அணிக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த கவுதம் கம்பீர் தான் இப்போது பயிற்சியில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.
கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்தி கம்பீரத்தை கூட்டி இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறும் என்பதுவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது இப்போது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த…
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…