Categories: latest newstamilnadu

சீமான் தன் நாக்கை அடக்கி வாசிச்சா நல்லா இருக்கும்… கீதா ஜீவன் ஆவேசம்…!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது நாட்டை அடக்கி வாசிக்க வேண்டும் என்று கீதா ஜீவன் என்று கூறி இருக்கின்றார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான கீதா ஜீவன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முத்தமிழ் கலைஞர் கருணாநிதி குறித்து சீமானின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தலைவருக்கு கலைஞர் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர், முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், கல்வி கடன் ரத்து, நுழைவுத் தேர்வு ரத்து, கணினி வழி வளர்ச்சி என பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றார்.

அவரை இழிவாக பேசுவதை திமுக அரசு கடுமையாக கண்டிக்கின்றது. திமுக தொண்டர்களை பொறுத்தவரையில் தலைவரின் கண் அசைவுக்காக தான் காத்திருக்கின்றோம். பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக பொறுமையாக இருக்கின்றோம். சீமான் கட்சியை சேர்ந்த துரைமுருகன் ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசுகிறார் என்று அருண் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் தான் அரசு நடவடிக்கை எடுத்தது.

தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை பயன்படுத்தி சீமான் பேசுவது சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் வகையில் இருக்கின்றது. இது ஏற்புடையதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாத அடுக்குமொழியில் பேசி தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றார். சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் .

அரசியல் அரவேக்காடு தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக தெரிகிறார் சீமான். பச்சோந்தி போல் ஒரு நாள் ஒரு கருத்தையும் மற்றொரு நாள் வேறொரு கருத்தையும் பேசுகின்றார். சீமான் அரசியல் தலைவருக்கான தகுதியானவர் அல்ல. எங்கள் தலைவருக்கு குறித்து பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது” என்று கூறியிருக்கின்றார் கீதா ஜீவன்.

Ramya Sri

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

20 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago