தற்போது எல்லோர் கையில் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போல நிறைய ஆப்கள் வந்துவிட்டது. ஆனால், பலரும் அந்த தொழில்நுட்பங்களை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பல குற்றங்கள் சமூகவலைத்தளங்கள் மூலம்தான் நடக்கிறது.
குறிப்பாக சிறுமிகளும், பெண்களும் தவறான நபர்களை நம்பி ஆபத்தில் சிக்கிவிடுவதும் நடந்து விடுகிறது. கரூர் மாவட்டம் விஜய மங்கலம் அருகேயுள்ள மூலனூர் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறிமி பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது நெருக்கமாக மாறியது.
மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்திய அந்த வாலிபர் விக்னேஷ் உன்னை ஆபசமாக காட்டு என சொல்லி இருக்கிறார். அந்த சிறுமியும் அந்த வாலிபரை நம்பி ஆபாசமாக நின்று போஸ் கொடுக்க அதை ஸ்கீரீன் ரெக்கார்டர் மூலம் பதிவை வைத்துகொண்டார் விக்னேஷ்.
அதன்பின் அந்த சிறுமியை தனிமையில் சந்திப்பதாக கூறி வர சொல்ல, சிறுமியோ மறுத்திருக்கிறார். வரவில்லையென்றால் உனது வீடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என சொல்லி மிரட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில் நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதனால், பயந்த சிறுமி தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து விக்னேஷை போலீசார் போக்சே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் விக்னேஷ் பல பெண்களிடம் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…