கடந்த இரண்டு நாட்களாகவே இறங்குமுகத்தில் இருந்து வந்தது தங்கத்தின் விற்பனை விலை. சென்னயில் நேற்று விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாயாகவும் (ரூ7,095/-), சவரன் ஒன்றிற்கு ஐம்பத்தி ஆறாயிரத்து எழனூற்றி அறுபது ரூபாய்க்கும் (ரூ.56,760/-) விற்கப்பட்டு வந்தது.
இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு நாட்கள் இருந்து வந்தது நகை பிரியர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் இது தற்காலிக சந்தோஷம் தான் என்பதனை இன்று நிரூபித்து விட்டது தங்கம் விலை உயர்வு பாதைக்கு மீண்டும் செல்லத்துவங்கியதன் மூலம்.
கிராம் ஒன்றுக்கு ஏழாயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கம் படிப்படியாக மேலும் உயரத்துவங்கியது. இன்று சென்னையில் விற்கப்பட்டு வரும் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு நாற்பத்தி ஐந்து ரூபாயும் (ரூ.45/-), சவரன் ஒன்றிற்கு முன்னூற்றி அறுபது ரூபாயும் (ரூ.360/-) உயர்ந்தே காணப்படுகிறது.
இந்த விலை உயர்வின் படி இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஏழாயிரத்து நூற்றி நாற்பது ரூபாயாக (ரூ.7,140/-) உள்ளது. அதே போல ஒரு சவரனின் விலை ஐம்பத்தி எழாயிரத்து நூற்றி இருபது ரூபாயாகவும் (ரூ.57,120/-) இருந்து வருகிறது. வெள்ளியின் விலையில் நேற்று எந்த வித மாற்றமும் தென்படவில்லை, அதே நிலை தான் இன்றும் நீடிக்கிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை நூற்றி மூன்று ரூபாயாக (ரூ.103/-) இருந்தது, ஒரு கிலோ பார் வெல்ளியின் விலை ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாயாக (ரூ.1,03,000/-) இருந்தது. மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் தான் இன்றும் விற்கப்படுகிறது வெள்ளி.
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…
பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும்…
அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…
அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…