Connect with us

cinema

ரஜினி ரசிகர்கள் கொண்டாட ரெடியா?…நல்ல செய்தி வந்திருச்சி…

Published

on

Rajini

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தியத் திறை உலகிலும் அதிக ஆதீக்கம் செலுத்தி வருபவர். இவர் நடித்து இம்மாதம் பத்தாம் தேதி வெளிவரத் தயாராக உள்ள “வேட்டையன்” படத்தின் டிரையலர் நேற்று வெளியிடப்பட்டது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது இந்த டிரையலர். இவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரானா, மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார், கடந்த முப்பதாம் தேதி இவருக்கு செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு நெஞ்சு வலி இருந்திருக்கிறது. இதனால் இவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினியின் உடல் நிலை மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Rajinikanth

Rajinikanth

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல், நடிகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் ரஜினி பூரண நலன் பெற வேண்டி தங்களது வாழ்த்துக்களை சொல்லியிருந்தனர்.

ரஜினிகாந்த் விரைவில் நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனைகளையும், கோவில்களில் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகின்றனர்.

ரஜினியின் உடல் நிலை குறித்து அவர் நலமுடன் இருக்கிறர் என சொல்லியிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவரது டிஸ்சார்ஜ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டமபர் மாதம் முப்பதாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி நாளை அக்டோபர் நான்காம் தேதி வீடு திரும்புவார் என  தெரிவித்துள்ளது.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

cinema

நண்பர் நலமடைய விழைகிறேன்…ரஜினிக்கு கமல் விடுத்துள்ள செய்தி…

Published

on

Kamal

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ரஜினி பூரண நலமடைய வாழ்த்தி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினி நலன் பெற வாழ்த்தியிருக்கிறார்.

ரஜினி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது நெஞ்சு வலிப்பதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

அதில் அடி வயிற்றில் வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதற்கான தீவிர சிகீட்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்குள்ளேயும் அவர் சூப்பர் ஸ்டாராகத் தான் இருக்கிறார் என மருத்துவர் தெரிவித்ததாக செய்திகள் வந்தது.

Kamal Rajini

Kamal Rajini

இந்நிலையில் ரஜினி குணமடைந்து வருகிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருந்தது.

அவர் விரைவில் நலன் பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் உற்ற நண்பரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் தனது  எக்ஸ் பக்கத்தில் ரஜினி பூரண நலனடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவரது பதிவில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

google news
Continue Reading

cinema

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

Published

on

Rajinikanth

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும், அசராத உழைப்பாலும் சினிவாவில் வானாளாவிய வெற்றி பெற்றவராக திகழ்ந்து வருபவர்.

“சூப்பர் ஸ்டார்” என அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். இவர் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த “வேட்டையன்” பட பாடல் வெளியீட்டு விழாவில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார்.

Super Star Rajinikanth

Super Star Rajinikanth

ஓணம் பண்டிகைக்கு “வேட்டையன்” படப்பாடலுக்கு “கூலி” படக்குழுவினருடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. “கூலி” படத்தில் நடித்து வரும் நிலையில் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகீட்சை வழங்கப்பட்டு வருகிறது. தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவரின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகீட்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறும் போது மருத்துவமனைக்குளே இருக்கும் போதும் அவர் சூப்பர் ஸ்டார் தான் என சொல்லியிருப்பதாக தமிழ் செய்தி சேனல் ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.

ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் தீவிரமான பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். அதே போல ரஜினிகாந்த் விரைவில் நலன் பெற்று வரவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

google news
Continue Reading

cinema

அறிவுரை சொன்ன ஆந்திர துணை முதல்வர்…மன்னிப்பு கேட்ட கார்த்தி…

Published

on

karthi pavan kalyan

ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் திருப்பதி பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. திரும்பும் திசை எல்லாம் திருப்பதி கோவில் லட்டு பற்றிய பேச்சுக்கள் இருக்கும் நிலையாகி விட்ட நேரத்தில் திரைப்பட விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசியதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண்.

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள “மெய்யழகன்” திரைப்படம் இம்மாதம் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோ நிகழ்ச்சி ஆந்திராவில் நடக்க, அதில் படத்தின் நாயகனான கார்த்தி பங்கேற்றார்.

karthi

karthi

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என கேட்க, அது உணர்வுப்பூர்வமான விஷயம், லட்டு பற்றி பேச வேண்டாம் என கார்த்தி கூறியிருந்தார்.

கார்த்தியின் இந்த பேச்சிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், சினிமா நிகழ்ச்சியில் லட்டுவை வைத்து நகைச்சுவை செய்யக்கூடாது என தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.  சனாதன தர்மம் குறித்து பேசும் போது நூறு முறை யோசித்து விட்டு பேச வேண்டும் என சொல்லியிருந்தார்.

இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி. அதோடு வெங்கடேச பெருமானின் பக்தன் என்ற முறையில் நமது பண்பாட்டின் மீது பிடிப்புடன் இருந்து வருவதாகவும் தனது சார்பான விளக்கத்தை சொல்லியிருக்கிறார் கார்த்தி.

 

google news
Continue Reading

cinema

சமரசத்துக்கு சம்மதம் சொன்ன திரிஷா!…வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்……

Published

on

Trisha

தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் திரிஷா. இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான திரைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் இவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் “தி கோட்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் திரிஷா. மெகா ஹிட்டான இந்த பாடல், ரீல்சுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இப்போது.  அஜீத்துடன் நடித்து இயக்கப்பட்டு வரும் “விடாமுயற்சி” படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்து வரும் “தக்-லைஃப்” படத்திலும் திரிஷா தற்போது நடித்து வருகிறார்.

The Goat

The Goat

இந்நிலையில் திரிஷா குடியிருந்து வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் மதில் சுவர் இடிக்கப்படுவது குறித்து திரிஷாவிற்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மெய்யப்பன் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தனது வீட்டின் கட்டமைப்பிற்கு தடையாக இருந்த பொது மதில் சுவரை அண்டை வீட்டுக்காரரான மெய்யப்பன் இடிக்க முயன்றுள்ளார்.  சுவரை இடிப்பதற்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுவரை இடிக்க இடைகால தடை விதித்தது. இந்த சூழலில் இந்த வழக்கு விஷயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுடன் சமரசம் செய்து கொள்வதாக திரிஷா தெரிவித்த நிலையில், இந்த வழக்கு முடித்து வைத்துள்ளது நீதி மன்றம். பேச்சு வார்த்தை மூலமாக இருவரும் சுவர் குறித்து சமரசமாக செல்ல முடிவு எடுத்துள்ளதாக திரிஷா தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

google news
Continue Reading

cinema

திருப்தி கொடுத்த லப்பர் பந்து!…ஆனந்தப்பட்ட அஷ்வின்…

Published

on

Ashwin

இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பேட்டிங்கில் சதமடித்து அசத்தினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

போட்டி துவங்கியதும் இந்திய அணியின் விக்கெட்டுகள் மலமலவென சரியத் துவங்கிய நிலையில் பொறுப்புடன் ஆடி டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் தனது இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்தார் அஷ்வின். இவருக்கு துணையாக மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய மற்றொரு ஆல்-ரவுண்டரான ஜடேஜாவும் என்பத்தி  ஆறு ரன்களை குவித்து அசத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல் அஷ்வினைப் போலவே பவுலிங்கிலும் அசத்தி வங்கதேசத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார். கடந்த வாரம் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான “லப்பர் பந்து” படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அஷ்வின்.

படத்தின் இயக்குனரை வெகுவாகப் பாராட்டியதோடு மட்டுமல்லாது, படத்தில் நடித்துள்ள அத்துனை பேருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அஷ்வின் சொல்லியிருக்கிறார்.

Lubber pandhu

Lubber pandhu

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் பிரபலமான தினேஷ், ஹரிஷ் கல்யான், ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள “லப்பர் பந்து” படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அஷ்வினும் “லப்பர் பந்து” படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘கெத்து’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தினேசும், ஹரீஸ் கல்யானும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள்  நடித்திருக்கின்றனர். படத்தின் கதைக்களம் கிரிக்கெட் விளையாட்டை வைத்து இயக்கப்பட்டிருக்கிறது.

google news
Continue Reading

Trending