அரசு பஸ்களில் பொதுவாக பயணம் செய்யும் பயணிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்னையே சில்லறை தான். தற்போது எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகி இருக்கும் நிலையில் அரசு பஸ் பயணத்திற்கு என்று காசை கையில் வைக்க வேண்டியதும் கட்டாயமாகிறது.
இந்நிலையில், தான் அரசு பஸ்களில் பயணிக்க யுபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் டிக்கெட் எடுக்கும் முறையை மே மாதம் தமிழக அரசு அறிவித்தது. தற்போது 100 சதவீதம் அரசு பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் டிக்கெட் எடுக்கும் வசதி அமலுக்கு வந்து இருக்கிறது.
இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறுகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு, விரைவு மற்றும் ஏசி பஸ்கள் உள்ளிட்டவை 1100க்கும் அதிகமாக இயக்கப்படுகிறது. அதிநவீன டிக்கெட் கருவிகள் மூலம் பணிமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டில் இருக்கிறது. இதனால் பயணிகளுக்கு சில்லறை, ஏடிஎம் செல்ல வேண்டும் என்ற எந்த கவலையும் இல்லை.
அதுப்போல, நடத்துனரும் கணக்கு போட்டு டிக்கெட் கிழிக்கும் வேலையை செய்ய வேண்டாம். ஊரை குறிப்பிட்டால் பயண தேதி, கட்டணம் உள்ளிட்டவை அடங்கும் டிக்கெட்டை கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இது வெளியூர் பயணங்களில் முற்றிலும் அமலுக்கு வரும் நிலையில் அடுத்த கட்டமாக மாநகர பேருந்துகளிலும் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…