ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்
ஏழை, எளிய மக்களுக்கு பல நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றது. அதன் மூலமாக மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அந்த வகையில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. அரசு ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவதற்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் குறைந்த வட்டியில் கடன் வீடு கட்டுவதற்கும் கொடுக்கப்பட்டு வருகின்றது. அனைவருக்கும் வீடு எனும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு மானியத்தில் வீடு கட்டிக் கொடுப்பது, இடம்வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்கு பணத்தை மானியமாக வழங்குவது, வங்கி கடன் வாயிலாக நடுத்தர வருவாய் பிரிவினர் வீடு வாங்கும் போது வட்டி தொகையில் மானியம் வழங்குவது போன்ற சலுகைகளை ஏற்படுத்தி தருகின்றது.
இந்த திட்டத்தில் ஏழைகளுக்கு வீடு வழங்குவதை அரசு நோக்கமாக வைத்திருக்கின்றது. கிராமப்புற மக்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2 லட்சம் வரையிலான வீட்டு கடனில் மூன்று சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது. இதன் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வங்கிகள் கடன் வழங்கும்.
ஆனால் இந்த மானியம் பயனாளிகளுக்கு கிடைப்பதற்கு ஒரு வருடமாகும். இந்த திட்டம் கடந்து 2023 ஆம் ஆண்டு உடன் முடிவடைந்த நிலையில் புதிய வகையில் இன்னும் சில சலுகைகளை சேர்த்து இந்த திட்டத்தை செயலாகம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கின்றது.
அந்த வகையில் வீடு வழங்கும் திட்டத்தில் அரசு புதிய முறையில் கூப்பனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இதன் மூலமாக வீடு வாங்குவதற்கான மானிய தொகையை பணமாக்கக்கூடிய கூப்பன்களை வழங்குவதற்கு திட்டமிடப்படுகின்றது இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் கடன் வாங்கும் மக்களுக்கு எளிதில் மானியமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…
பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும்…
அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…
அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…