குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாகக் கூறி செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி பேசியதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், அது போலி செய்தி என ஆளுநர் மாளிகை விளக்கமளித்திருப்பதோடு, இதுபோன்ற தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் – ஆளுநர் ரவி’ என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன
இந்த விஷயத்தில் இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலும் மறுப்பதோடு, தவறான நோக்கத்தோடு பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் செயல் மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…