govt update news
ஆதார் அப்டேட் பண்ணிட்டீங்களா?..இல்லைனா இனியாவது பண்ணுங்க..கடைசி தேதியினை நீட்டித்த அரசு..
![aadhaar update date extended - Cinereporters Info aadhaar update date extended](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/aadhaar-update-date-extended.jpg)
இந்திய குடிமகன் அனைவரும் ஆதார் வைத்திருப்பது கட்டாயம். ஏனென்றால் இந்த ஆதார் கார்டின் மூலம்தான் நாம் வங்கி கணக்கில் இருந்து குடும்ப அட்டை வரை நமது அத்தியாவசிய தேவைகளை பெற முடியும். இந்த ஆதார் கார்டில் நமது தகவல்களை சரியாக கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே இந்திய அரசு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை சரிசெய்ய ஜுன் 14ஆம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. தற்போது இந்த தேதியானது நீட்டிக்கப்பட்டுள்ளது்.
இதன்படி ஆதார் கார்டு சரிசெய்வதற்கான காலத்தினை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலுக்கு முகவரி சான்றையும் ஆதார் கார்டும் நமக்கு தேவைப்படும்.
aadhaar update easy through uidai
ஆதார் அப்டேட் பண்ணுவதற்கான கட்டணம்:
ஆதார் அப்டேட்டை http://www.myaadhaar.uidai.gov.in எனப்படும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று இலவசமாக விண்ணப்பிக்கலாம். ஒருவேளை நாம் டிஜிட்டல் சேவா என அழைக்கப்படும் CSC சென்டரில் ரூ. 25 கட்டணமாக செலுத்தியும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
தேவையான சான்றுகள்:
இந்த அப்டேட்டில் நாம் நமது முகவரி, பெயர், பிறந்த தேதி அன அனைத்தையுமே அப்டேட் செய்யலாம். இவ்வாறு அப்டேட் செய்வதற்கு நமக்கு நமது ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். அப்போதுதான் நாம் நமது மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை உபயோகித்து நமது ஆதாரினை அப்டேட் செய்யலாம்.
aadhaar update
ஆதார் கார்டினை அப்டேட் செய்வதற்கான படிநிலைகள்:
- முதலில் ஆதாரின் இணையதளமான http://www.myaadhaar.uidai.gov.in என்ற முகவரிக்கு செல்லவும்.
- பின் login செய்து அதில் நமது பெயர்/பாலினம்/பிறந்த தேதி மற்றும் முகவரிக்கான பட்டனை அழுத்தவும்.
- ஆதார் அப்டேட் என்ற பட்டனை அழுத்தவும்.
- நாம் எதனை அப்டேட் செய்கிறோமோ அந்த பட்டனை அழுத்தவும்.
- பின் தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்யவும்.
- பின் Pay now என்ற பட்டனை அழுத்திய பின் வரும் URN எண்ணை குறித்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணின் மூலம் நமது ஆதார் அப்டேட் ஆகிவிட்டதா என கண்டறியலாம்.
ஆதார் அப்டேட் ஆகியதை எவ்வாறு கண்டறிவது:
நமது மொபைலுக்கு வந்த URN எண்ணை வைத்து http://www.https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus என்ற இணையதளத்திற்கு சென்று அதனுள் நமது ஆதார் கார்டானது நாம் அளித்த தகவலுக்கு ஏற்ப அப்டேட் ஆகிவிட்டதா என காணலாம்.
govt update news
குட் நியூஸ்..! ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
அம்மா உணவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் அம்மா உணவகம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இந்த அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதில் காலை மதியம் என இரண்டு வேளையும் குறைந்த செலவில் மக்கள் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. காலையில் சாம்பாருடன் இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
மதியம் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டன. இது தவிர வாரத்திற்கு ஒரு நாள் வரைட்டி சாதமாக புளி சாதம், தக்காளி சாதம் போன்றவை ஐந்து ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த உணவகம் கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்தால் அம்மா உணவகம் மூடப்படும் என்று தகவல் வெளியானது.
ஆனால் அம்மா உணவகம் தற்போது வரை இயங்கி வருகின்றன. சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் மகளிர் சுய உதவி குழு சார்பாக பணிபுரியும் உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலி வழங்கப்படுகின்றது. இவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த இருப்பதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “சென்னையில் உள்ள அம்மா உணவ ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி உள்ளோம். இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 3.07 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகின்றது. அதிமுக ஆட்சியில் இருந்த போது ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அம்மா உணவக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
govt update news
வெளியானது க்ரூப்2 அப்ளிகேஷன்… யார் யார் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் உள்ளிட்ட முக்கிய தகவல்…
தமிழக அரசின் 2327 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் க்ரூப்2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று(ஜூன்20) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குரூப்-2 தேர்வு வாயிலாக உதவி லேபர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 507 காலியிடங்களும், குரூப்-2-ஏ தேர்வு வாயிலாக கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வணிகவரி உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலியிடங்களும் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுகளுக்கான வயது வரம்பு, பட்டப்படிப்பு தகுதிகள் அடங்கிய விளம்பரம் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன்20) தொடங்கி ஜூலை 19ந் தேதியுடன் முடிவடைகிறது.
முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடக்க இருக்கிறது. பொது அறிவில் 100 கேள்விகள் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்னரை மதிப்பெண் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலி பணியிடத்துக்கு 10 பேர் விதம் முதல்நிலை தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். மெயின் தேர்வு க்ரூப்2 மற்றும் க்ரூப் 2ஏ என தனி தனியாக நடத்தப்படும். இதுகுறித்து மேலும் தகவலை அறிய www.tnpsc.gov.in இணையத்தில் தெளிவான விளம்பரம் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
govt update news
அட இது புதுசா இருக்கே..அப்போ இனி வங்கிக்கே போக வேணாமா?..கலக்குறீங்களே PNB..
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் நமக்கு பல செளகரியங்கள் கிடைக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களை அனைத்து நிறுவனங்களில் தற்போது உபயோகப்படுத்தும்படியும் அமைந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் ஒன்றுதான் Meteverse என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.
metaverse facility
இந்த வசதியில் நாம் நமக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி கொள்ளலாம். மேலும் இதன் மூலம் நாம் மற்றவர்களுடனும் தொடர்பினை வைத்து கொள்ளலாம். நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் உலகத்தினை கற்பனை உலகமாக மாற்றுவதற்கு Augmented Reality மற்றும் அந்த கற்பனை உலகத்தில் நாம் உணர்ச்சிபூர்வமாக வாழ்வதற்கு Virtual reality என இவ்விரண்டையும் சேர்த்ததுதான் Metaverse என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.
இந்த வசதியினை தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Virtual Bank வசதியின் மூலம் நமக்கு பல வசதிகளும் கிடைக்கின்றன. இது இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தினை கொடுக்கிறது. இந்த வசதியின் மூலம் வங்கிகளின் வசதியான பணத்தினை டெபாசிட் செய்வது, லோன் வசதிகள், Retail/MSME வாசதிகள், டிஜிட்டல் திட்டங்கள், அரசின் திட்டங்கள் போன்ற வசதிகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு Virtual Reality மூலம் பெற்று கொள்ளலாம்.
PNB virtual reality feature
இந்த வசதியினை அதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அதாவது அலுவலகம், வீடு என எந்த இடத்தில் இருந்தும் நாம் உபயோகப்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த வங்கியானது 3டி வசதியுடன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.
govt update news
ஒரு வழியா வந்துருச்சுப்பா..பெண்களுக்கான ரூ.1000 உதவி தொகையை எவ்வாறு பெறுவதுனு தெரியனுமா?..
தமிழக முதலைமச்சர் தனது தேர்தல் வாக்குமூலத்தில் மாதமாதம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக அளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஜுலை 10ஆம் தேதி வெளியிட்டார். இதன்படி கீழ்காணும் தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த உதவிதொகையை பெறலாம் எனவும் அறிவித்தார்.
application form sample
தகுதியானவர்கள்:
- இந்த உதவி தொகையை பெற விரும்புவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- வருடத்திற்கு நாம் உபயோகிக்கும் மின்சாரம் 3600 யூனிட்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது.
- குடும்ப உறுப்பினர்கள் அரசாங்க பணிகளிலோ அல்லது பென்ஷன் வாங்குபவராகவோ அல்லது அரசியல் பிரமுகராகவோ இருத்தல் கூடாது.
- மேலும் குடும்ப தலைவர் பெயரில் நான்கு சக்கர வாகனம் பதிவு செய்திருக்க கூடாது.
- குடும்ப தலைவர் 5 ஏக்கருக்கு மேல் விளை நிலமும் 10 ஏக்கருக்கு மேல் வறண்ட நிலமும் இருத்தல் கூடாது.
குடும்ப தலைவிகளுக்கான வரையறைகள்:
- இந்த உதவி தொகையை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை குடும்ப தலைவரின் பெயரில் குடும்ப அட்டை இருந்தாலும் பிரச்சனை இல்லை. அந்த அட்டையில் உள்ள குடும்ப தலைவி இந்த தொகையினை பெற்று கொள்ளலாம்.
- குடும்ப தலைவி இல்லாத நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள 21 வயதினை கடந்த பெண்ணிற்கு இந்த உதவி தொகை வழங்கப்படும். இந்த வசதி திருநங்கைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் அறிவிப்பின்படி இந்த திட்டமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 நாள் முன்னாள் முதலமைச்சரான சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள் அன்று நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டதின் கீழ் கிட்டதட்ட 1.5 லட்சம் பயனர்கள் விண்ணப்பிப்பார்கள் எனவும் தெரிகின்றது. இதற்கான சிறப்பு முகாம்களை ஆங்காங்கே உள்ள நியாய விலை கடைகளில் நடத்துமாறு மாவட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரேஷன் அட்டை இல்லாத எழைகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் போன்றவர்கள் இத்திட்டத்தி சேர அவர்களின் ஆதார் கார்டுகளை வைத்திருத்தல் அவசியம். இதற்கான விண்ணப்பத்தினை பெற கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
https://drive.google.com/file/d/1aYZS89jJ4E-tWxMEKrFEPPLVfAncD3Kp/view?pli=1
govt update news
போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தினை பற்றி தெரியாம இருந்தா எப்படி?..3000 முதலீட்டில் 2 லட்சம் வரை பயனடைய செய்யும் பொன்னான திட்டம்..
இந்திய தபால் நிலையங்களில் மக்கள் பயனடையும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன அதில் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது தொடர்வைப்பு சிறுசேமிப்பு திட்டம். போஸ்ட் ஆபிஸின் RD திட்டங்கள், கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேமிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை அடிபடையில் முதன்மையானதாக விளங்குகிறது.
மாதந்தோறும் சிறு தொகையை(குறைந்த பட்சம் ரூ.100/-) தொடர்ந்து சில ஆண்டுகள் போஸ்ட் ஆபிஸில் தவறாமல் கட்டி, டெப்பாசிட் முதிர்வு காலத்தில் அசல் மற்றும் வட்டியை திருப்பி பெற்று கொள்ளலாம்.
இதில் நமக்கு முக்கியமான மற்றும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் RD-யின் வட்டி விகிதத்தை 6.2 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. சிறுசேமிப்பின் லாபம் அதிகப்படும்.
save money through RD scheme
இவ்வட்டி விகித உயர்வினால் ஐந்தாண்டு திட்டத்தில் நீங்கள் மாத தவனையாக ரூ.2000/-, ரூ3000/- மற்றும் ரூ.4000/- செலுத்தும்போது உங்களுக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
மாதத்தவனையாக ரூ.2000/-யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.1,20,000/- மற்றும் வட்டிதொகையான % 21,983/- யும் சேர்த்து ரூ.1,41,983/- கிடைக்கும்.
மாதத்தவனையாக ரூ.3000/- யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.1,80,000/- மற்றும் வட்டிதொகையான ரூ.31,972/- யும் சேர்த்து ரூ.2,12,972/- கிடைக்கும்.
மாதத்தவனையாக ரூ.4000/- யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.2,40,000/- மற்றும் வட்டிதொகையான ரூ.43,968/- யும் சேர்த்து ரூ.2,83,968/- கிடைக்கும். ஆஹ! நாமும் போஸ்ட் ஆபிஸ் RD ல் நாம் சம்பாதித்த பணத்தை சேமித்து வளமாக வாழ்வோம்.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
latest news22 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news21 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
tech news5 hours ago
தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..
-
latest news22 hours ago
my v3 ads: நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி ஆனந்தன் – என்ன காரணம்?
-
Cricket2 days ago
ஐசிசி-யின் டி20 ஆல்ரவுண்டர் பட்டியல்: ஜடேஜாவை பின்தள்ளிய விராட் கோலி