குஜராத் மாநிலத்தில் 10 காலிப்பணியிடங்களுக்காக இளைஞர்கள் போட்டி போட்டு கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் ஜகதியா என்ற இடத்தில் தனியார் ரசாயன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதில் காலியாக இருக்கும் 10 இடங்களை நிரப்புவதற்காக நேர்காணல் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு 800க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார்கள்.
அங்கலீஸ்வரர் பகுதியில் நேர்காணல் நடத்த தனியார் ஓட்டலில் நுழைவு வாசலின் இரு பகுதியிலும் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். பலர் கதவுக்கு வெளியே முட்டி மோதியபடி நின்றனர். பாதி பேர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிகளின் மேல் ஏறியதால் அந்த கம்பி வளைந்து உடைந்தே போனது. இதில் பலரும் கீழே விழுந்தனர். இதில் யாருக்கும் அதில் காயம் ஏற்படவில்லை .
இது குறித்து காங்கிரஸ் அரசு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பாஜக அரசை சாடி இருக்கின்றது. நாடு முழுவதும் வேலையின்மை காணப்படுகின்றது என்று குற்றம் சாட்டியிருந்தது. 10 காலி இடங்களை நிரப்புவதற்கு முறையான விஷயங்களை அவர்கள் கூறியிருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு நிறுவனமே காரணம். இது வேதனை தருகின்றது. மீண்டும் இதுபோல் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கையை எடுக்கப்படும் என்று பாஜக எம்பி மன்சூர் வசாவா தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…