பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா பரவிய விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியில் பிரபல பிக்பாஸ் போட்டியாளரான நடாஷாவை காதலித்து மே 20ந் தேதி 2020ம் ஆண்டு ஹர்திக் பாண்டியா திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் இருக்கிறார். சமீபகாலமாகவே நடாஷாவை ஹர்திக் பிரிந்துவிட்டார் என்ற வதந்திகள் உலா வந்தது.
ஆனால் இருவரும் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தனர். உலகக்கோப்பை வெற்றியை தன் மகனுடன் மட்டுமே ஹர்திக் கொண்டாடினார். அதுப்போல அம்பானி வீட்டு திருமணத்தில் பாண்டியா தனியாக தான் வந்தார். இதனால் வதந்திகள் தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில் ஒருவழியா ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவி நடாஷாவை பிரிவதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டா போஸ்ட்டில், நான்கு வருடங்களாக ஒன்றாக இருந்தோம். தற்போது நானும், நடாஷாவும் பிரிவதாக முடிவெடுத்து இருக்கிறோம். ஒன்றாக இருப்பதற்காக நிறையவே முயற்சி செய்தோம். ஆனால் இருவருக்கும் இதுதான் நல்ல வழியாக இருக்கும் என நம்புகிறேன்.
நாங்கள் இருவரும் சந்தோஷம், தோழமை, பரஸ்பர மரியாதையை கொண்டு ஒரு குடும்பத்தினை உருவாக்கி இருந்ததால் இது ரொம்ப கடினமான முடிவு தான். எங்களுக்கு அகஸ்தியா இருக்கிறான். அவன் எங்கள் இருவரின் வாழ்க்கையின் மையமாக இருப்பான். இருவரும் அவனுக்கான முடிவுகளை எடுப்போம்.
அவன் சந்தோஷத்துக்கான எல்லா விஷயத்தினையும் எங்களால் முடிந்த அளவு செய்வோம். கஷ்டம் மற்றும் சங்கடமான சூழ்நிலையில் உங்களுடைய ஆதரவுவையும், புரிதலையும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…