இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை பகிர்ந்து இருப்பதை அடுத்து, ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.
கடந்த 2018 செப்டம்பர் மாதம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, அதில் காயம் ஏற்பட்டு 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்ட போதிலும், ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல இருந்தார். கடைசியாக கடந்த டிசம்பர் 2018-இல் முதல் தர போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடினார்.
இந்திய அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். தற்போது பாண்டியா பதிவிட்டுள்ள வீடியோக்களை பார்க்கும் போது அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் கொண்டிருப்பது தெரிகிறது. எனினும், இது குறித்து அவர் அணி நிர்வாகத்திடம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
“ஹர்திக் மீண்டும் சிவப்பு பந்தில் பந்துவீசுவது சிறப்பாகவே இருக்கிறது, ஆனால் அவர் இதுபற்றி சம்பந்தப்பட்ட தேர்வுக்குழு தலைவர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரிடம் ஏதும் தகவல் தெரிவித்து இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது,” என பிசிசிஐ வட்டார மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கும் போதிலும், ஹர்திக் பாண்டியா தற்போதைய வங்கதேச தொடரில் இடம்பெறுவது கேள்விக்குறியான விஷயம் தான். எனினும், அடுத்தடுத்து இந்திய அணி விளையாட இருக்கும் டெஸ்ட் தொடர்களில் ஹர்திக் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும். குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஹர்திக் அணியில் இருப்பது சாதகமாக இருக்கும்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…