சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் தற்போது சூழல் குளிர்ச்சியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் கடந்த 3 நாட்களாக மாலைப் பொழுதுகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தொடர்ந்து தமிழகத்திலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சென்னையில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…