Categories: latest newstamilnadu

திகைக்க வைத்த திடீர் காற்று…திசை மாறிய திண்டுக்கல்…

தமிழகத்தின் தட்ப வெட்ப சூழ்நிலையில் திடீர், திடீர் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கன மழை முதல் மிதமானது வரையிலான மழை பொழிவு இருந்து வந்தது. நீலகிரியில் மிகக் கடுமையான மழை பெய்தது. இயலபு வாழக்கை முற்றிலுமாக பாதிக்கும் அளவில் இந்த மழை பொழிவு இருந்து வந்தது.

பொதுவாகவே ஆடி மாதம் துவங்கிவிட்டாலே தமிழகம் வீசும் தரைக்காற்றின் அளவும் அதிகரித்தே இருக்கும். முன் காலத்தில் ஆடி மாத காற்று குறித்து பேசும் போது ‘ஆடிக் காற்றில் அம்மிக்கல்லும் நகரும்’ என  குறிப்பிடுவார்கள். நாகரீக வளர்ச்சியின் காரணமாக அம்மிக்கல் காணாமல் போனலும் ஆடி மாதத்தில் வீசும் காற்று மட்டும் அப்படியே இருந்து வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் பலத்த காற்று  வீசி வருகிறது.

Wind

அதிகரித்துள்ள இந்த காற்றின் வேகத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். இந்நிலையில் திண்டுக்கல்லில் திடீரென சூறைக்காற்று வீசத்துவங்கியது. யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென வீசிய இந்த காற்றால் நகர வாசிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

சாலையில் சென்றவர்களின் கண்களில் மண்ணை வாரி இறைத்தது. இதனால் சிறிது நேரம் விபத்து ஏற்படும் அபாயமும் நீடித்தது. நகரின் முக்கியப்குதியில் வீசிய இந்த திடீர் சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் நிலை காணப்பட்டது. ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த பேனர்கள் காற்றில் பறக்கத் துவங்கியது. சில நிமிடங்கள நீடித்த இந்த திடீர் சூறாவளியால் திகைத்துப்போனது திண்டுக்கல்

sankar sundar

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

6 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

6 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

7 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

15 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

15 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

16 hours ago