ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் ஜாமீன் கேட்டபோது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்து வந்த நிலையில் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் பலன் அளிக்கவில்லை. மேலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்வதற்காக ஜாமின் கேட்ட போதும் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் உயர்நீதிமன்றத்தில் புது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த அந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் ஜாமீன் வழங்கி விடுதலை செய்ததது. இதையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
தற்போது ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்று இருக்கின்றார். அவர் சிறையில் இருந்த போது சம்பா சோரன் முதல்வராகப் பதவி வகித்து வந்த நிலையில் நேற்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து வழங்கி இருந்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இன்று ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஹேமன் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…