பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்ஸர்களுக்காகவே அதை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். ஆனால் தற்போது இங்கிலாந்து நாட்டில் சிக்ஸர் அடித்தால் அவுட் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் 234 ஆண்டுகள் பழமை வாய்ந்த உள்ளூர் கிளப் தான் சௌத்விக் அண்ட் ஷோர்ஹாம். இங்கு ஏராளமான வீரர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பது வழக்கம். ஆனால் அவர்கள் விளையாட்டின் போது அடிக்கும் சிக்ஸர்கள் அருகில் இருக்கும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து விடுகிறது.
இதனால் அந்த கிளப்பில் அடிக்கடி அங்கிருப்பவர்கள் புகார் தெரிவித்த பிரச்சினை செய்வது வழக்கமாகி இருக்கிறது. இதை தடுக்க என்ன செய்யலாம் என கிளப் நிர்வாகம் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு உதித்த சிந்தனை தான் இது.. அதாவது சிக்ஸ் அடித்தால் தானே இந்த பிரச்சினை அடிக்காமலே இருந்தால் என்ன நடக்கும்.
இதை செயல்முறை படுத்தவே இனி இங்கு விளையாடும் பேட்ஸ்மேன்கள் முதல் சிக்ஸ் அடித்தால் ரன் எதுவுமில்லை என்றும், இரண்டாவது சிக்சை அடித்தால் அவர்கள் அவுட் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். இது அங்கிருக்கும் வீரர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் போர் மற்றும் சிக்ஸர்கள் அடிப்பது தான் பெரிய சுவாரசியத்தை கொடுக்கும். தற்போது சிக்ஸ் அடித்தால் அவுட் என்ற விதியால் கிரிக்கெட்டின் உயிரோட்டத்தையே அது பாதிக்கும் என அங்கிருப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்ளூர் விளையாட்டை பார்க்க வரும் ரசிகர்களும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக கூறி வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த…
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…