latest news
Hizb-ut-Tahrir case: ரேடாரில் சிக்கிய 2 பேர்… தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
![Untitled design_20240630_113055_0000 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Untitled-design_20240630_113055_0000.png)
தடைசெய்யப்பட்ட Hizb-ut-Tahrir தீவிரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
Hizb-ut-Tahrir வழக்கு
கடந்த 2021-ல் மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான Hizb-ut-Tahrir உடன் தொடர்பில் இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஃபேஸ்புக்கில் `காழிமார் தெருவில் தூங்கா விழிகள் ரெண்டு’ என்கிற கணக்கு மூலம் பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது மதுரை திடீர் நகர் காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது.
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்த என்.ஐ.ஏ அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. இதில், சென்னையைச் சேர்ந்த ஹமீது ஹூசைன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரஹ்மான் மற்றும் முகமது மௌரீஸ், காதர் நவாஸ் ஷெரீஃப், அகமது அலி ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
புதுக்கோட்டையை அடுத்த மண்டையூரில் விவசாய நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்திருந்த அகமது கான் மற்றும் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரைச் சேர்ந்த அகமது என்கிற இரண்டு பேரைக் குறிவைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
latest news
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! – திமுக – பாமக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு…
![vikkiravandi - Cinereporters Info vikkira](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/vikkiravandi.jpg)
கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுக்கிறார்.
மேலும், நம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவிட்டார். தேர்தல் முறையாக நடக்காது என்பதால் அதிமுக போட்டியிடவில்லை எனவும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
ஜூலை 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் களை கட்டியிருக்கிறது. இந்நிலையில், அங்கு திமுக – பாமக கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. சாணிமேடு என்கிற பகுதியில் அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சாரம் செய்ய வரவிருக்கிறார். ஆனால், அதில் கலந்துகொள்ள விடாமல் மக்களை திமுகவினர் அடைத்து வைத்திருப்பதாக கூறி பாமக தொண்டர்கள் கூறுகின்றனர்.
மக்களை வெளியே விடுமாறு கூறி திமுகவினரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
latest news
நான் முதல்வன் திட்டம்.. இதுவரை 25,000 மாணவர்களுக்கு வேலை.. 8 லட்சம் வரை சம்பளம்..!
![muthalvan 1 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/muthalvan-1.jpg)
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழக அரசு சார்பாக நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு அரசு உதவி செய்து வருகின்றது. கடந்த ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ஓலோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் எலக்ட்ரிக் வாகன ஆலைகளில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, போர்டு, ஹெச்.சி.எல் டெக் மற்றும் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 252 கல்லூரிகளில் நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக இந்த ஆண்டில் இறுதி ஆண்டு படித்து வரும் 58 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நடைமுறை தொடரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.
latest news
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. 5 நிமிடத்தில் காலியான டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்..!
![train - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/train.jpg)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிகளவு ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஏனென்றால் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், குறித்த நேரத்திற்கு பயணம் என்பதாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிடுவார்கள் என்பதால் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. அதன்படி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி விரைவாக விற்றுதீர்ந்து விட்டது.
இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை விரைவு ரயில் போன்றவற்றில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் இரண்டு நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
india
இந்தியர்கள் ஆண்டு வருமானத்தினை விட மூன்று மடங்கு இதுக்கு தான் அதிக செலவு செய்றாங்களாம்!
![money - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/money.jpg)
அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிகம் செலவு செய்வது என்னவோ கல்விக்கு இல்லாமல் திருமணத்துக்கு தான் என்ற ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய குடிமகன்கள் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, மளிகை பொருட்களை விட திருமணத்துக்கு தான் அதிக செலவு செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி திருமணத்துக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மேலும், இது கல்விக்கு ஆகும் செலவை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ஜெப்ரீஸ் நிறுவனம் இந்தியர்கள் செய்யும் செலவுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகையில், இந்தியாவில் திருமணத்துக்கு மட்டுமே 10 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு திருமணத்திற்கும் 12.5 லட்சம் வரை சராசரியாக செலவு செய்யப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 4 லட்சமாக இருக்க அவர்கள் மூன்று மடங்கு அதிகமாக ஒரு திருமணத்திற்கு செலவு செய்கின்றனர். தனி நபரின் ஆண்டு வருமானத்தினை கணக்கிடும் போது இது ஐந்து மடங்காக இருப்பதாக கூறப்படுகிறது.
திருமண செலவில் 30 சதவீதம் ஆடைகள் மற்றும் நகைகள் வாங்க செலவாகிறது. உணவு பொருட்களுக்கு 20 சதவீதம் செலவு செய்யப்படுகிறது. இதை விட போட்டோகிராபி, மேக்கப் உள்ளிட்ட ஆடம்பரங்களுக்கே அதிக அளவு இந்திய திருமணங்களில் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…
india
‘கூகுள் மேப்’ பொய் சொல்லாதுடா..! காரோடு ஆற்றுக்குள் பாய்ந்த இளைஞர்கள்.. நூலிலையில் எஸ்கேப்..!
![google map - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/google-map.jpg)
கேரள மாநிலத்தில் கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்ற இளைஞர்கள் ஆற்றல் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
google மேப் என்பது ஒரு புவியியல் தகவல் தொழில்நுட்பம் மென்பொருள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இரு சக்கரங்களிலோ அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு ஆப். செல்ல வேண்டிய இடத்திற்கு சாலை உள்ளிட்ட அனைத்தையும் கூகுள் மேப் காட்டி விடுவதால் நமக்கு தெரியாத இடத்திற்கு கூட எளிதில் நம்மால் சென்று விட முடியும்.
இருப்பினும் ஒரு சில சமயங்களில் கூகுள் மேப் தவறான வழியை காட்டி விடுகின்றது. இதனால் மிகப்பெரிய விபத்தும் சிக்கலும் ஏற்படுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கின்றது. அதாவது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு என்ற பகுதியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் தஷ்ரீப் இருவரும் கர்நாடக மாநிலம் ஒப்பினங்கில் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்று இருக்கிறார்கள்.
அவர்கள் google map உதவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது குட்டிகோல் பல்லாஞ்சி என்ற ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றார்கள். google மேப் புதியதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல் ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை காட்டியுள்ளது. அதை பின்பற்றி இருவரும் காரில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை.
இதனால் அவர்களது கார் திடீரென்று ஆற்றுக் கொள் பாய்ந்து விட்டது. அவர்களது கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சிறிது தூரம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து செடிகளில் கார் மாட்டி நின்றுவிட்டது. இதனால் இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்து விட்டார்கள்.
உடனே தங்களது உறவினருக்கு போன் செய்து தகவலை தெரிவித்த பிறகு அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளத்தில் மாட்டி இருந்த அப்துல் ரஷீத் மற்றும் தஷீத் ஆகிய இருவரையும் மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் ஆற்றின் நடுவே சிக்கிய காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் தப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Cricket2 days ago
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி
-
Cricket23 hours ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..
-
tech news2 days ago
இனி பேட்டரி மாற்ற சிரமம் வேண்டாம்.. ஐபோனில் அறிமுகமாகும் புது வசதி
-
latest news21 hours ago
முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டது மாநில கல்வி கொள்கை… இதற்கெல்லாம் இனி தடா தான்!…
-
tech news2 days ago
போக்கோ போனுக்கு ரூ. 5,000 விலை குறைப்பு – அமேசான் அறிவிப்பு
-
Cricket2 days ago
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – ஓ.டி.டி. வியூஸ் இத்தனை கோடிகளா?
-
Cricket2 days ago
கோலி, ரோகித் வரிசையில் ஜடேஜா.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
-
latest news17 hours ago
அடப்பாவி..! பசியால் அழுத 5 மாத குழந்தை.. தூக்கம் கெட்டதால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்…!