Connect with us

latest news

Hizb-ut-Tahrir case: ரேடாரில் சிக்கிய 2 பேர்… தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

Published

on

தடைசெய்யப்பட்ட Hizb-ut-Tahrir தீவிரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

Hizb-ut-Tahrir வழக்கு

கடந்த 2021-ல் மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான Hizb-ut-Tahrir உடன் தொடர்பில் இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஃபேஸ்புக்கில் `காழிமார் தெருவில் தூங்கா விழிகள் ரெண்டு’ என்கிற கணக்கு மூலம் பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது மதுரை திடீர் நகர் காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்த என்.ஐ.ஏ அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. இதில், சென்னையைச் சேர்ந்த ஹமீது ஹூசைன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரஹ்மான் மற்றும் முகமது மௌரீஸ், காதர் நவாஸ் ஷெரீஃப், அகமது அலி ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

புதுக்கோட்டையை அடுத்த மண்டையூரில் விவசாய நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்திருந்த அகமது கான் மற்றும் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரைச் சேர்ந்த அகமது என்கிற இரண்டு பேரைக் குறிவைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..

Published

on

By

சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி மீண்டும் ஒரு சாதனையை செய்து இருக்கிறார். ஆனால் இந்த முறை சாதனை கிரிக்கெட்டில் இல்லை என்பது தான் ஆச்சரியமே. ஐசிசி உலக கோப்பை வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக மாறி இருக்கிறது.

இந்திய அணி வீரர்கள் இணைந்து கோப்பையை கொண்டாடும் தருணத்தின் புகைப்படத்தினை வெளியிட்டு எமோஷனலாக ரைட்டப் எழுதி இருந்தார் விராட் கோலி. அந்த போஸ்ட் தற்போது இந்த பதிவை எழுதும் வரை 19 மில்லியன் லைக்குகளை பெற்று உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த பதிவில் விராட் கோலி, இதை விட ஒரு ஆச்சரிய நாள் குறித்து கனவு காண முடியாது. என் நன்றியால் தலைவணங்குகிறேன். கடைசியில் சாதித்துவிட்டோம். ஜெய் ஹிந்த் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்னர் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை வாங்கிய புகைப்படம் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் கல்யாண புகைப்படம் தான். அந்த புகைப்படத்தின் சாதனையை விராட் கோலி முறியடித்து இருக்கிறார்.

விராட் புகைப்படத்தில் இண்டர்சேஷனல் ஸ்போர்ட்ஸ் வீரர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.  ஐசிசி டி20 உலக கோப்பையை வாங்கிய கையோடு தன்னுடைய ஓய்வை அறிவித்தார் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி

 

Continue Reading

latest news

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! – திமுக – பாமக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு…

Published

on

கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுக்கிறார்.

மேலும், நம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவிட்டார். தேர்தல் முறையாக நடக்காது என்பதால் அதிமுக போட்டியிடவில்லை எனவும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.

ஜூலை 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் களை கட்டியிருக்கிறது. இந்நிலையில், அங்கு திமுக – பாமக கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. சாணிமேடு என்கிற பகுதியில் அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சாரம் செய்ய வரவிருக்கிறார். ஆனால், அதில் கலந்துகொள்ள விடாமல் மக்களை திமுகவினர் அடைத்து வைத்திருப்பதாக கூறி பாமக தொண்டர்கள் கூறுகின்றனர்.

மக்களை வெளியே விடுமாறு கூறி திமுகவினரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Continue Reading

latest news

நான் முதல்வன் திட்டம்.. இதுவரை 25,000 மாணவர்களுக்கு வேலை.. 8 லட்சம் வரை சம்பளம்..!

Published

on

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழக அரசு சார்பாக நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு அரசு உதவி செய்து வருகின்றது. கடந்த ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ஓலோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் எலக்ட்ரிக் வாகன ஆலைகளில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து  Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, போர்டு, ஹெச்.சி.எல் டெக் மற்றும் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 252 கல்லூரிகளில் நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக இந்த ஆண்டில் இறுதி ஆண்டு படித்து வரும் 58 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நடைமுறை தொடரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.

Continue Reading

latest news

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. 5 நிமிடத்தில் காலியான டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்..!

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிகளவு ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஏனென்றால் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், குறித்த நேரத்திற்கு பயணம் என்பதாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிடுவார்கள் என்பதால் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. அதன்படி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி விரைவாக விற்றுதீர்ந்து விட்டது.

இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை விரைவு ரயில் போன்றவற்றில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் இரண்டு நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

india

இந்தியர்கள் ஆண்டு வருமானத்தினை விட மூன்று மடங்கு இதுக்கு தான் அதிக செலவு செய்றாங்களாம்!

Published

on

By

அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிகம் செலவு செய்வது என்னவோ கல்விக்கு இல்லாமல் திருமணத்துக்கு தான் என்ற ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய குடிமகன்கள் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, மளிகை பொருட்களை விட திருமணத்துக்கு தான் அதிக செலவு செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி திருமணத்துக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மேலும், இது கல்விக்கு ஆகும் செலவை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ஜெப்ரீஸ் நிறுவனம் இந்தியர்கள் செய்யும் செலவுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகையில், இந்தியாவில் திருமணத்துக்கு மட்டுமே 10 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு திருமணத்திற்கும் 12.5 லட்சம் வரை சராசரியாக செலவு செய்யப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 4 லட்சமாக இருக்க அவர்கள் மூன்று மடங்கு அதிகமாக ஒரு திருமணத்திற்கு செலவு செய்கின்றனர். தனி நபரின் ஆண்டு வருமானத்தினை கணக்கிடும் போது இது ஐந்து மடங்காக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண செலவில் 30 சதவீதம் ஆடைகள் மற்றும் நகைகள் வாங்க செலவாகிறது. உணவு பொருட்களுக்கு 20 சதவீதம் செலவு செய்யப்படுகிறது. இதை விட போட்டோகிராபி, மேக்கப் உள்ளிட்ட ஆடம்பரங்களுக்கே அதிக அளவு இந்திய திருமணங்களில் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…

Continue Reading

Trending

Exit mobile version