Categories: latest newstamilnadu

ஊறுகாய் தராத ஹோட்டல் நிர்வாகம்… 35 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்…

பொதுவாகவே ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் அவர்கள் மெனுவில் குறிப்பிட்டு பொருட்களை நாம் ஆர்டர் செய்தால் அதில் எதுவும் தவறவிடக்கூடாது என நினைப்போம். அதை நாம் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் நமக்கு உரிய இலையில் அது இருக்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கும்.

டிஜிட்டல் காலமான இன்று நிறைய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். தாங்கள் ஆர்டர் செய்த பொருட்களில் எதுவும் தவறவிட்டால் உடனே அதை போட்டோவாக எடுத்து புகார் தெரிவித்து அதற்குரிய நிவாரணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இதுவே ஹோட்டல் போய் சென்று சாப்பிடும்போது அதில் சில தவறுகள் நடந்தால் அதற்குரிய நிவாரணம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஆனால் தன்னுடைய உரிமையை நீதிமன்றம் வரை சென்று ஒருவர் நிலைநாட்டியிருக்கும் சுவாரசிய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் பாலமுருகன் ஹோட்டலில் ஆரோக்கியசாமி என்பவர் 25 பார்சல் சாப்பாடு வாங்கி இருக்கிறார். அதை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் சோதித்துப் பார்த்தபோது அதில் ஊறுகாய் வைக்காமல் ஹோட்டல் நிர்வாகம் தவறவிட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஹோட்டல் நேரில் போய் கேட்டதற்கு அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி தன்னுடைய பிரச்சனையை புகாராக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் சரியான பதில் அளிக்காததை அடுத்து ஆரோக்கியசாமிக்கு முப்பதாயிரம் ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு வருடமாக நடைபெற்ற வழக்கிற்கான செலவாக 5 ஆயிரம் ரூபாயும், 25 பார்சல் சாப்பாட்டில் வைக்க வேண்டிய ஊறுகாய் விலையான 25 ரூபாய் என மொத்தம் சேர்த்து 35 ஆயிரத்து 25 ரூபாயை ஆரோக்கியசாமிக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறி ஹோட்டல் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

AKHILAN

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

7 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

43 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago