ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி? மேலும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு இந்தியரின் அடையாள அட்டையாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கியமாகும். தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடங்கி இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை ஆதார் கார்டு நம் வாழ்க்கையில் ஒரு அத்தியாவசிய ஒன்றாக மாறியிருக்கின்றது.
ஆதார் கார்டில் தனி நபர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். இந்த தகவல் அனைத்தும் சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஆதார் கார்டு செல்லாததாக மாறிவிடும். அரசின் உதவி பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே ஆதார் கார்டில் உள்ள தகவல்களை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
அதிலும் ஆதார் கார்டில் மிக முக்கியமானது மொபைல் நம்பர் தான். மொபைல் நம்பர் இருந்தால் தான் மற்ற விவரங்களை நம்மால் அப்டேட் செய்ய முடியும். பொதுவாக ஆதார் தளத்தில் லாகின் செய்யும்போது நாம் எந்த நம்பரை ஆதார் கார்டில் கொடுத்திருக்கிறோமா அதற்கு தான் ஓடிபி செல்லும். எனவே ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய தற்போதைய மொபைல் நம்பரை ஆதார் கார்டில் அப்டேட் செய்திருக்க வேண்டியது முக்கியம்.
ஆதார் வெப்சைட்டில் மொபைல் நம்பரை ஆன்லைனிலேயே புதுப்பிக்கவும், மாற்றம் செய்யவும் முடியாது. நேரடியாக ஆதார் சேவை மையத்திற்கு சென்று தான் மொபைல் நம்பரை புதுப்பிக்க முடியும். அதற்கு முன்பு https://appointments.uidai.gov.in/easearch.aspx என்ற இணைப்பில் உங்களுக்கு அருகில் உள்ள சேவை மையத்தை கண்டறிய முடியும். மொபைல் நம்பர் மட்டும் அல்லாமல் மின்னஞ்சல் ஐடியை புதுப்பிக்கவும் ஆதார் மையத்திற்கு தான் நாம் செல்ல வேண்டும்.
உங்களுடைய அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று மொபைல் நம்பரை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவும் எந்த ஒரு ஆவணத்தையும் நீங்கள் வழங்க வேண்டியதில்லை. ஆதார் சேவை மையத்தில் மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கு ரூபாய் 50 கொடுக்க வேண்டும். மற்ற சாதாரண அப்டேட்களை நீங்கள் இலவசமாக ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும்.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…