தன்னுடன் வாழ மறுத்த பெண் காவலரை அவரின் கணவர் பட்டப்பகலில் சாலையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் டில் ராணி. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இன்று பணிமுடிந்து அவர் வீட்டிற்க்கு திரும்பியபோது அவரின் கணவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த செய்தி வெளியான போது வெட்டியது அவரின் கணவர் என்பது யாருக்கும் தெரியவில்லை. அதன்பின், மருத்துவமனையில் டில் ராணி கொடுத்த வாக்குமூலத்திற்கு பின்னரே அவரை வெட்டியது அவரின் கணவர் என்பது தெரியவந்திருக்கிறது. அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
தன்னுடன் வந்து வாழுமாறு அவரின் கணவர் அழைத்திருக்கிறார். ஆனால், ராணிக்கு அதில் விருப்பமில்லை. அதோடு, கணவரை விவாகரத்து செய்யும் முடிவிலும் அவர் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான், கோபத்தில் அவரின் கணவர் அவரை வெட்டியதாக கருதப்படுகிறது.
காயமைடந்த ராணி வெட்டுக்காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் கணவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…