Categories: indialatest news

ரொம்ப தேசப்பற்றுள்ள திருடனா இருப்பாரோ.. ஐ லவ் இந்தியா.. திருடிய காரில் மன்னிப்பு கடிதம்..!

காரை திருடிவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிச்சென்ற திருடனின் செயல் பலரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது.

காரைத் திருடி விட்டு பிறகு மனம் கேட்காமல் அந்த காரிலேயே மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து ரோட்டிலேயே விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. டெல்லியில் பாலாம் காலணியை சேர்ந்த வினய் குமார் என்பவரின் ஸ்கார்பியோ கார் சமீபத்தில் திருடு போனது. இது தொடர்பாக 10ஆம் தேதி காரின் உரிமையாளர் வினய் குமார் புகார் கொடுத்திருந்தார். அதன்படி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து காரைதீவிரமாக தேடி வந்தார்கள்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவு ராஜஸ்தானில் உள்ள ஒரு பகுதியில் திருடுபோன கார் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரின் பின்புற கண்ணாடியில் சில காகிதங்கள் ஒட்டப்பட்டி இருந்தது. அந்த காகிதத்தில் டெல்லியில் பாலாம் காலணியில் இருந்து இந்த கார் திருடப்பட்டது. மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் அந்த காரின் நம்பர் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து காரை மீண்டும் உரிமையாளரிடம் சிரமமின்றி ஒப்படைக்க திருடன் எழுதி வைத்த தகவலாகும். மற்றொரு காகிதத்தில் நான் இந்தியாவை நேசிக்கின்றேன் என்று எழுதப்பட்டு மற்றொன்றில் இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது. உடனே போலீசுக்கு சொல்லுங்கள் அவசரம் என எழுதப்பட்டிருந்தது.

ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் நிறுத்தப்பட்டிருந்த இந்த காரை பார்த்த பகுதியை சேர்ந்த மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தார்கள். இந்த கார் வேறு ஏதேனும் குற்றச்செயலுக்கு திருடப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்தார்கள். இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

1 hour ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

2 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

2 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

3 hours ago