நீங்க கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா…? புது ரூல்ஸ் வந்துருக்கு… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..!

ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு சலுகைகளை மாற்றுவது இது இரண்டாவது முறையாகும். இந்த மாற்றங்கள் விமான நிலைய ஓய்வறை அணுகல், வெகுமதி புள்ளி, பரிவர்த்தனை கட்டணங்கள், துணை அட்டைதாரர்களுக்கான கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றை பாதிக்கும் என கூறப்படுகின்றது.

ஐசிஐசிஐ வங்கி குறிப்பிட்ட கார்டு வகைகளில் வெகுமதிகளுக்கு வரம்புகளை விதித்து இருக்கின்றது. பயன்பாடு மற்றும் காப்பீட்டு தொகைகளுக்கு, நுழைவு மற்றும் நடுத்தர அளவிலான கார்டுகளுக்கு மாதத்திற்கு 40 ஆயிரம் வரை மற்றும் பிரீமியம் கார்டுகளுக்கு ரூபாய் 80 ஆயிரம் என அதிகபட்ச செலவு வரம்பை அந்த வங்கி நிர்ணயம் செய்திருக்கின்றது.

மளிகை செலவுகளுக்கும் கார்டுகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுழைவு மற்றும் நடுத்தர அளவிலான கார்டுதாரர்கள் மாதத்திற்கு 20 ஆயிரம் வரை பயன்படுத்தலாம். அதே சமயம் பிரீமியம் கார்டுதாரர்கள் ரிவார்டுகளை அடைவதற்கு முன் 40,000 செலவிட முடியும். இது தவிர எரிபொருள் செலவுகள் பெரும்பாலான கார்டுகளுக்கு மாதாந்திரம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமரால்ட் மாஸ்டர் கார்டு, மெட்டல் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது கூடுதல் கட்டணம் தள்ளுபடிக்கு தகுதி பெறும் போது ஒரு லட்சம் வரை எரிபொருள் பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றது. மேலும், ஐசிஐசிஐ வங்கி சில வகையான செலவினங்களுக்கு ஒரு சதவீதம் பரிவர்த்தனை கட்டணத்தையும், மூன்றாம் தரப்பு தளங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்கள், மாதத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்துக்கு அதிகமான பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் மாதத்திற்கு ரூபாய் 10 ஆயிரத்துக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் கட்டணங்கள் இதற்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர கட்டண தள்ளுபடிக்கான தகுதியை கணக்கிடும் வகையில் வாடகை கொடுப்பனவுகள், அரசாங்க பரிவர்த்தனைகள் மற்றும் கல்வி செலவுகள் ஆகியவை இனி கருத்தில் கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது. கார்டுதாரர்கள் இந்த சலுகைகளுக்கு தகுதி பெற விரும்பினால் அவர்கள் தங்கள் செலவின உத்திகளில் சில மாற்றங்களை செய்யலாம்.

ஐசிஐசிஐ வங்கி தனது கட்டண அமைப்பையும் மாற்றியிருக்கின்றது. அதன்படி துணை அட்டையில் 199 கட்டணம் வசூல் செய்யப்படும். இது தவிர தாமதமாக பணம் செலுத்தும் கட்டணமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது ரூபாய் 500 வரையிலான இருப்பு ரூபாய் 100 இருக்கும், 50 ஆயிரத்துக்கு உள்ள இருப்புக்கு 1300 வரை கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramya Sri

Recent Posts

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

1 hour ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

3 hours ago