Categories: indialatest news

3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..! மக்களே கவனமா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

டெல்லியில் லேசான மழை தொடரும். வரும் நாட்களில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதைத்தொடர்ந்து ராக்கெட் பகுதிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தானே, பால்கர், புனே, சதார் மற்றும் மகாராஷ்டிராவின் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மல்லபுரம், கண்ணூர் மற்றும் காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், மீதமுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தானே உள்ள பிவாண்டி பகுதியில் கம்வாரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

மேலும் கர்நாடகாவின் தெற்கு உள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அந்த மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. குடகு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், மின்சார கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. டெல்லியில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramya Sri

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

5 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

41 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago