தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த விலை உயர்வு நகைப் பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. விலையில் மாற்றம் காணாமல் இருந்த வெள்ளியும் இன்று உயரத் துவங்கியுள்ளது.
தங்கம் இப்போதெல்லாம் அடிக்கடி விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென குறைந்த விற்பனை விலை ஆபரணப்பிரியர்களை ஆனந்ததில் ஆழ்த்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து விலை உயர்வை மட்டுமே சந்தித்து வந்து பேரதிர்ச்சியை கொடுத்து வந்தது தங்க நகை வாங்குவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு.
நேற்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நூற்றி பத்தாகவும்(ரூ.7,110/-), சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூற்றி என்பதாகவும் (ரூ.56,880/-) இருந்த நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்றை விட கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூற்றி இருபது (ரூ.7,120/-) ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது (ரூ.56,960/-) ஒரு சவரன் ஆபரணத் தங்கம். கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் காட்டாத வெள்ளியின் விலை இன்று உயரத்துவங்கியிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது சென்னையில் விலை அடிப்படையில்.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்றை விட கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-) , கிலோவிற்கு ஆயிரம் ரூபாயும் (ரூ.1000/-) அதிகரித்துள்ளது வெள்ளி.
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாலை நாலு மணிக்கு கோலாகலாமாக துவங்க உள்ளது. இதற்கு முன்னர்…
தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது. சனாதனம்…
தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என…
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகீட்சை முடிந்து அவர் நலமமுடன் வீடு…
நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது.…