ஸர்பிரைஸ் கொடுத்த சர்பராஸ் கான்!…இன்னிங்ஸ் லீடு எடுக்க இந்தியா கடும் போராட்டம்?…

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் உதை வாங்கியது இந்திய அணி. இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்திலேயே மிகக் குறைவான ஸ்கோரில் ஆல்-அவுட் ஆன போட்டிகளில் ஒன்று இந்த முதல் இன்னிங்ஸ் என்ற மிக மோசமான விளையாட்டினை அரங்கேற்றியிருந்தனர் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள்.

மூன்றாவது நாளான இன்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா என்ற கேள்வி தான் பிரதானமான ஒன்றாக இருந்தது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் மனதில்.நானூற்றி இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு பிறகு. நிதானமான துவக்கத்தை கொடுத்தனர் இந்திய ஓப்பனர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால். எழுபத்தி இரண்டு ரன்களை முதல் விக்கெட் பார்ட்னஷிப்பாக எடுத்திருந்த நேரத்தில் முப்பத்தி ஐந்து ரன்களை எடுத்திருந்த ஜெய்ஷ்வால் அஜாஷ் பட்டேல் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியின் சாதூர்யமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கை தலை தூக்க துவங்கியது.

Sarfaraz khan

அதே நேரத்தில் அரை சதத்தினை கடந்திருந்த ரோஹித் சர்மா அஜாஷ் பட்டேலின் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

விராத் கோலியுடன் இணைந்தார் சர்பராஸ் கான், டெஸ்ட் போட்டியா? அல்லது இது ஒரு நாள் போட்டியா? என்ற சந்தகத்தை ஏற்படுத்தும் விதமாக தனது துணிச்சலான அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடிக்கச் செய்து ஸ்ர்பிரைஸ் கொடுத்தார்.

மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் சர்பராஸ் கான் எழுபத்தி எட்டு பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் எழுபது ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கிறார். சர்பராஸ் கானின் அதிரடி ஆட்டதிற்கு கம்பெனி கொடுத்து ஆடி வந்த விராத் கோலி எழுபது ரன்களை எடுத்திருந்த நேரத்தில் க்ளென் பிலிப்ஸ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

நியூஸிலாந்து தரப்பில் அஜாஷ் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், க்ளென் பிலிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருக்கிறார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா நியூஸிலாந்தை விட நூற்றி இருபத்தி ஐந்து ரன்கள் பின்தங்கி இருக்கிறது.

ராகுல், ரிஷப் பன்ட், வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்த ஆல்-ரவுண்டர் அஷ்வின், மற்றுமொரு ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங் ஆட காத்திருப்பதால் இந்திய இரண்டாவது இன்னிங்ஸில் லீடு எடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் முழுவதுமாக பேட்டிங் செய்து நல்ல லீடிங் கிடைத்து இந்திய அணி டிக்ளேர் செய்யும் என்பது இந்திய ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

 

 

sankar sundar

Recent Posts

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

12 mins ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

1 hour ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

1 hour ago

கண்ணை கவரும் மாடல்.. தெறிக்கவிட்ட ஓபன் இயர்பட்ஸ்.. டச் கண்ட்ரோலும் இருக்கு.. எந்த மாடல் தெரியுமா..?

பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும்…

1 hour ago

சொந்த வீடு தாங்க சூப்பர்!…அதிகரித்து வரும் எண்ணிக்கை…

அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…

2 hours ago

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…

2 hours ago