ஐசிசி டி20 உலகக் கோப்பையை 2007க்கு பின்னர் வென்ற இந்திய அணி நாடு திரும்பி இருக்கும் நிலையில் முதல் வேலையாக பிரதமர் மோடியை சந்தித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படாஸில் ஏற்பட்ட புயலால் நாடு திரும்ப முடியாத நிலை இருந்தது. ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து இந்தியா திரும்பி இருக்கிறது இந்திய அணி. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடம் கழித்து கோப்பையை தன் வசப்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து நேற்று வெஸ்ட் இண்டீஸில் இருந்து ஏர் இந்தியா சாம்பியன்ஸ்24 என்னும் தனி விமானத்தினை பிசிசிஐ ஏற்பாடு செய்தது. அதில் கிளம்பிய இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். இதை தொடர்ந்து, நாட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இந்திய அணி சந்தித்து இருக்கிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, கேப்டன் ரோகித் உள்பட மொத்த டீமும் இந்திய ஜெர்சியில் பிரதமரை அவர் இல்லத்தில் சந்தித்து இருக்கின்றனர். இதுகுறித்து புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மும்பைக்கு விமானத்தின் மூலம் வரும் இந்திய அணி மும்பை விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று மாலை (ஜூலை4) வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவை ரசிகர்கள் கூட்டமும் அலைமோத தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…