Categories: Cricketlatest news

அதிகரித்து வரும் இந்திய அணியின் ஆதீக்கம்…பேட்டிங், பவுலிங் தர வரிசைகளில் தலை நிமிர்வு…

கிரிக்கெட் விளையாட்டு உணர்வோடு கலந்து விட்டது இந்திய ரசிகர்களுக்கு. சச்சின் அவுட் ஆகி விட்டால் டிவியை ஆஃப் செய்து விட்டு வேலையை பார்க்க சென்றதிலிருந்து, பதினோறாவது பேட்ஸ்மேன் ஆடும் வரை அசையாமல் டிவி முன் கண் இமைக்காமல் பார்க்கும் வரை வளர்ந்திருக்கிறது ரசிகர்களின் உணர்வு. இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் காட்டும் திறன் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற மனநிலை தான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை இருந்து வருகிறது.  ஆனால் இப்போது இந்த நிலைமை தலை கீழாக மாறி வருகிறது. ஐபில் போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர் தான் இந்திய அணி எழுச்சி பெற்றுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இப்போது உள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை எதிர்த்து விளையாடும் எதிர் அணிகள் எல்லாம் பயத்திலேயே இருந்து வருகின்றது.

இளம் வீரர்களின் வருகையும் அவர்களது திறனும், ஆற்றலும் வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது இந்திய அணியை. தோனியின் கேப்டன்சியின் போது தான் இந்த நிலை உச்சத்தை அடையத்துவங்கியது. இதற்கு விதை போட்டது சவுரவ் கங்குலி என சொல்லப்பட்டு வந்த நேரத்தில். டெஸ்ட், ஐம்பது ஓவர் ஒரு நாள், இருபது ஓவர் போட்டிகள் என மூன்று விதமான பரிணாமத்திலும் இந்திய வீரர்களின் ஆதீக்கம் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது .

டெஸ்ட் போட்டிகளின் சர்வதேச தர வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி, மீதமுள்ள ஐம்பது ஓவர், இருபது ஓவர் போட்டிகள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Indian Test Team

அதே போல பேட்டிங், பவுலிங், ஆல்-ரவுண்டர்கள் ரேங்கிங்களிலும் இந்திய வீரர்கள் தங்களது ஆதீக்கத்தை செலுத்தியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் முறையே முதல், இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

பவுங்கில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் இடத்தில் இருந்து வருகிறார். நியூசிலாந்து, ஆஸ்திரலிய அணிகளுடனான தொடர்களில் விளையாட தங்களை தயார் படுத்தி வரும் இந்திய வீரர்களின் கவனம் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தின் மீதும் இருந்தும் வருகிறது.

sankar sundar

Recent Posts

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

2 mins ago

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

2 hours ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago