இக்கட்டான நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி…அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல்?…

மகளிர் கிரிக்கெட் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி பலமிக்க ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டு வருகிறது. இந்த தொடரின் துவக்கத்தில் இந்திய அணி தடுமாறியதால் முதல் சுற்றிலிருந்து அடுத்த சுற்றுற்கு செல்வதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.

மொத்தம் பத்து அணிகள் இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரண்டு குரூப்புகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் – ஏவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இதே குரூப்பில் பலமிக்க
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.

மற்றொரு குரூப்பில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

Australian Team

குரூப் – ஏவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இது வரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது.

இதில் இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்திய அணியைப் போலவே நியூஸிலாந்து அணியும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்து
வருகிறது. டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர் ரேணுகா தாகூர் சிங் நான்கு ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை
எடுத்துள்ளார்.

தீப்தி ஷர்மா, ராதா யாதவ், பூஜா வஸ்த்ராகார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி தொடக்க பேட்ஸ்மேன் கிரேஸ் ஹாரீஸ் நாற்பது ரன்களை குவித்தார். அந்த அணியின்
மற்றுமொரு நட்சத்திர வீரரான தகிலா மெக்ராத் முப்பத்தி இரண்டு ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பதினைந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி நூற்றி ஓரு ரன்களுக்கு ஐந்து
விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே
அரை இறுதிக்குள் நுழையப் போவதுன் யார் என கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில்
இருப்பதால் தற்போது நடை பெற்று வரும் போட்டி அதிகபேரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

sankar sundar

Recent Posts

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…

4 mins ago

பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி தேவையில்லாம அலைய வேண்டாம்… எப்படி செய்வது..?

ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்யும் வசதியை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்திருந்தது. இது தொடர்பான தகவலை நாம் தெரிந்து…

1 hour ago

ஓய்வு காலத்தில் கை நிறைய வருமானம்… சீனியர் சிட்டிசன்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு…!

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக லாபம் கிடைக்கின்றது. இது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து…

2 hours ago

நோ சேஞ்ச் சொன்ன தங்கம்…விலை உயர்ந்த வெள்ளி…

தங்கத்தின் விலை நாள் தோறும் தொடர்ச்சியாக கண்காணிகப்பட்டு வரப்படுகிறது. தங்கத்தை போலவே தான் வெள்ளியின் விலையும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.…

2 hours ago

டிகிரி முடித்தவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலை… அப்ளை பண்ண மறந்துடாதீங்க..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்:…

17 hours ago

டிப்ளமோ-வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..!

திருநெல்வேலி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரகப்பணி இயக்கத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது இந்த பணியிடங்களுக்கு…

18 hours ago