மத்தியபிரதேசம் இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். கின்னஸ் புத்தகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட சான்றிதழை மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்ததாவது: “தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் இந்தூரின் சகோதர சகோதரிகள் படைத்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கு அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்திருக்கின்றது” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை முறியடித்து தற்போது இந்தூர் புதிய சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…