ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்து அசத்தியது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதலாது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.
இந்த போட்டியின் 2 மற்றும் 3-ம் நாள் ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து நேற்று நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த வங்கேதேசம் அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரோகித் சர்மா முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார்.
மேலும், இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 38.4 ஓவர்களில் 285 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் மட்டும் இந்திய அணி ஐந்து உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது.
இந்தியாவில் அரசு சார்பில் ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கிய திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் உள்ளது. இந்தத்…
உலகளவில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மேலும், சமீப காலங்களில் நுகர்வோரும் அதிகளவு நிதி…
மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி நான்காம் நாள் ஆட்டத்தை எப்படி கொண்டு செல்வது…
இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட…
இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதன் நான்காம் நாளில் பற்றி எரிந்தது. நான்காம் நாளின் முதல்…
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…