ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்திய இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது அவருக்கு பல சாதனைகளை பெற்றுக் கொடுத்ததோடு, இந்திய அணியும் தொடரை முழுமையாக கைப்பற்றவும் துணையாக இருந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போது சதம் விளாசியது, பந்துவீச்சில் கணிசமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதை யாரும் மறக்க முடியாது.
சென்னை மற்றும் கான்பூர் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் விளையாடிய விதம் அவர் பல சாதனைகளை படைக்கவும், சில சாதனைகளை தகர்க்கவும் செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் செய்த சம்பவத்தை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
பந்துவீச்சில் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் படடியலில் அஷ்வின் மற்றும் பும்ரா முதலிடம் பிடித்தனர். இருவரும் இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற அஷ்வின், முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தத் தொடர் நாயகன் விருதை சேர்த்து அஷ்வின் இதுவரை 11 தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இலங்கை அணியின் ஜாம்பவான் வீரராக திகழ்ந்த முத்தையா முரளிதரனும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 11 முறை வென்று முதலிடத்தில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஜாக்ஸ் காலிஸ் 9 முறை, இம்ரான் கான் 8 முறை, ரிச்சர்ட் ஹாட்லி 8 முறையும், ஷேன் வார்னே 8 முறையும் தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.
தொடர் நாயகன் விருது மட்டுமின்றி, இந்தத் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25-இல் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜோஷ் ஹாசில்வுட் 51 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடம்பிடித்துள்ளார்.
தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு…
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து…
பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ்…
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன்…
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம்…
கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது…