Categories: Cricketlatest news

INDvsBAN டெஸ்ட்: ஸ்பின்-க்கு சாதகமான பிட்ச், 3 ஃபாஸ்ட் பவுலர்களை களமிறக்கிய இந்தியா – ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிது. பந்துவீச்சு கேட்ட வங்கதேசம் அணி இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்து, டாப் ஆர்டரை ஆட்டம் காண செய்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு சாதகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக இந்திய பந்துவீச்சில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு டுவிஸ்ட் கொடுக்கும் வகையில், இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியின் இந்த முடிவு அனைவர் மனதிலும் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

எனினும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணியின் முடிவு இந்த போட்டியை கடந்து எதிர்கால திட்டமிடல் மற்றும் பயிற்சி ஆகியவற்றை சார்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளம் செம்மண் அதிகளவில் கலந்திருக்கும். இது ஏராளமான பவுன்ஸ்-ஐ வெளிப்படுத்தும். இது இந்திய வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

பவுன்ஸ்-க்கு இந்தியாவில் தயாராகும் போது, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு பழகியிருக்கும். ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும். இந்த நிலையில், தற்போது முதல் பவுன்ஸ் அதிகமுள்ள ஆடுகளங்களில் பந்துவீசும் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்க முடியும்.

இதை கருத்தில் கொண்டு தான் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

Web Desk

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

4 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

11 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

32 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago