Categories: Cricketlatest news

INDvsBAN 2வது டெஸ்ட்: கான்பூரில் பாதுகாப்பு குளறுபடி, UPCA கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் சி ஸ்டாண்டு பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை காண தகுதியில்லாத சூழலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

பாதுகாப்பு குறைபாடு பற்றிய தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்த நிலையில், உத்தர பிரதேச கிரிக்கெட் வாரியம், கிரீன் பார்க் மைதானத்தின் பாதுகாப்பு குறித்து வெளியாகி வரும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்து இருக்கிறது.

ரசிகர்கள் பாதுகாப்பு விஷயத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் பொதுப் பணி துறை மற்றும் கான்பூர் ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த வல்லுநர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் படி சி ஸ்டாண்டில் உள்ள மொத்த இருக்கைகளில் கிட்டத்தட்ட 2800 இருக்கைகளை காலியாக வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டாண்டில் மொத்தம் 10,000 இருக்கைகள் உள்ள நிலையில், வெறும் 7,200 இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதே மைதானத்தில் நடைபெற்ற முந்தைய போட்டியை விட, தற்போது கிட்டத்தட்ட 6,000 இருக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் பாதுகாப்பு விஷயத்தில் தேவையான அனுத்து வகை முன்னேற்பாடுகளையும் உத்தர பிரதேச கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

22 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago