Categories: Cricketlatest news

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. இதுப்பற்றிய தகவல் ஐபிஎல் அணிகளுக்கு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. புதிய விதிமுறைகளின் படி ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் ஒப்பந்த மதிப்பு தவிர்த்து, அவர்கள் குறிப்பிட்ட அணியில் இருப்பதற்கு ஒவ்வொரு அணியும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும்.

இதுப்பற்றிய அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு அணியும் போட்டி கட்டணமாக ரூ. 12.60 கோடியை செலுத்த வேண்டும். இந்தத் தொகை அணிகள் ஏலத்திற்காக செலவிடும் தொகையில் சேராது. ரூ. 12.60 கோடியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு போட்டிக்கு ரூ. 90 லட்சம் சேரும். 14 போட்டிகளுக்கு ரூ. 90 லட்சம் சேர்க்கும் போது மொத்த தொகை ரூ. 12.60 கோடியாக இருக்கும்.

முதற்கட்ட போட்டி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையிலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ இடையே மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வீரர்களின் ஊதியம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வைத்து அணிகள் வீரர்களை நிதி ரீதியில் ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

Web Desk

Recent Posts

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

58 mins ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

1 hour ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

2 hours ago

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

3 hours ago

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…

4 hours ago

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

12 hours ago