Connect with us

Cricket

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

Published

on

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் அணிகள் வீரர்களை தக்க வைத்துக் கொள்வது மற்றும் ரைட் டு மேட்ச் விதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு அணியும் ஐந்து கேப்டு வீரர்கள் அதிகபட்சம் (இந்தியா மற்றும் வெளிநாடு), அதிகபட்சம் இரண்டு அன்-கேப்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஐபிஎல் அணிகளுக்கான ஏலத் தொகை ரூ. 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போது மொத்த சம்பளத்தில் ஏலத் தொகை, போட்டி கட்டணம் மற்றும் வீரர்கள் செயல்பாட்டுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்டவை அடங்கும். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் மொத்த சம்பளத்தில் ஏலத்தொகை மற்றும் வீரர்கள் செயல்பாட்டுக்கான ஊக்கத்தொகை மட்டுமே இடம்பெற்று இருந்தது.

தற்போது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி கட்டண முறை கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பெரிய ஏலத்திற்கு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை பதிவு செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வீரர் ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற முடியாது.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், ஐபிஎல் சீசன் துவங்கும் முன்பு தொடரில் இருந்து விலகுவது அல்லது தொடரில் கலந்து கொள்ள மறுக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வீரர் அடுத்த இரண்டு சீசன்களில் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது. 2025-27 வரையிலான ஐபிஎல் தொடர்களில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

google news

Cricket

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

Published

on

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ். டோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இது குறித்த அறிவிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள் மட்டும் அன்-கேப்டு வீரர்களாக கருதப்படுவார்கள் என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது. எம்.எஸ். டோனி ரசிகர்களுக்காக அடுத்த சீசனில் விளையாட ஆர்வம் காட்டிய நிலையில், ஐபிஎல் விதிகள் இந்த விஷயத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது.

மேலும், அணியில் தக்க வைக்கும் போது, பெரிய தொகையில் ரீடெயின் செய்யப்பட்டு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த டோனி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த விலையில் ரீடெயின் செய்ய முடியும் எனில், அடுத்த சீசனில் எம்எஸ் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் பிசிசிஐ நடத்திய ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.

அந்த அறிவிப்பில், இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அன்-கேப்டு வீரராக மாற்றப்படலாம். எனினும், இவ்வாறு மாற்றப்படுவதற்கு அந்த வீரர் கடைசி ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கக்கூடாது. மேலும், பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இடம்பெற்றிருக்கக் கூடாது. இந்த விதியின் படி சென்னை அணி எவ்வித தயக்கமும் இன்றி எம்.எஸ். டோனியை அடுத்த சீசனில் விளையாட வைக்க அணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

google news
Continue Reading

Cricket

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

Published

on

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. மழை குறுக்கிட்டதால், போட்டியில் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றிரவு மழை பெய்தது, இரண்டாம் நாள் முழுக்க மழை தொடர்ந்த காரணத்தால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது இந்தியாவில் இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக பலமுறை மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஒருநாள் ஆட்டம் முழுக்க பாதிக்கப்பட்டது கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதல் முறை ஆகும்.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப்படாமல் தடைப்பட்டது. அந்த சீரிசில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

அதன்பிறகு, கான்பூரில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மேலும், போட்டியின் மூன்றாம் நாளான இன்றும் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் இன்றைய ஆட்டமும் முழுமையாக கைவிடப்படும் சூழல் நிலவுகிறது.

போட்டியின் கடைசி இரண்டு நாள் ஆட்டத்தின் போது வானம் தெளிவாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உள்ளது. இதே தொடரில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

google news
Continue Reading

Cricket

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான டி20 தொடர் அக்டோபர் 6, அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும் மூன்றாவது போட்டி ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன.

இந்த தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் அகர்வால்.

முன்னதாக இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரில் வைத்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தனது பயணத்தை தொடங்கினார்.

google news
Continue Reading

Cricket

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

Published

on

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. இதுப்பற்றிய தகவல் ஐபிஎல் அணிகளுக்கு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. புதிய விதிமுறைகளின் படி ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் ஒப்பந்த மதிப்பு தவிர்த்து, அவர்கள் குறிப்பிட்ட அணியில் இருப்பதற்கு ஒவ்வொரு அணியும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும்.

இதுப்பற்றிய அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு அணியும் போட்டி கட்டணமாக ரூ. 12.60 கோடியை செலுத்த வேண்டும். இந்தத் தொகை அணிகள் ஏலத்திற்காக செலவிடும் தொகையில் சேராது. ரூ. 12.60 கோடியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு போட்டிக்கு ரூ. 90 லட்சம் சேரும். 14 போட்டிகளுக்கு ரூ. 90 லட்சம் சேர்க்கும் போது மொத்த தொகை ரூ. 12.60 கோடியாக இருக்கும்.

முதற்கட்ட போட்டி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையிலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ இடையே மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வீரர்களின் ஊதியம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வைத்து அணிகள் வீரர்களை நிதி ரீதியில் ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

google news
Continue Reading

Cricket

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

Published

on

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. சிவப்பு பந்துடன் ஹர்திக் பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து பலரும், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறினர். பலரும் இவரது டெஸ்ட் கம்பேக் விரைவில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக ஐபிஎல் 2022 ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். முழு கவனத்தையும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா செலுத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. இதற்கும் கூட அவர் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடினால், தேசிய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது ஏன் என்ற கேள்விக்கு விக்கெட் கீப்பர், பேட்டர் பார்த்திவ் பட்டேல் பதில் அளித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமான போது ஜியோசினிமாவில் பேசிய பார்த்திவ் பட்டேல், ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக சிவப்பு பந்து கொண்டு பயிற்சி செய்ய சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.

“ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. வெள்ளை பந்து கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தான் அவர் சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். என்னை பொருத்தவரை அவரது உடல், நான்கு அல்லது ஐந்து நாள் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட அவர் ஒற்றை முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும், இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்,” என்றார்.

google news
Continue Reading

Trending