Categories: Cricketlatest news

கம்பீர் மீது சூதாட்டப் புகாரா…? 9 ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் கடிதம்… எழுந்த புது சர்ச்சை…!

ஐபிஎல் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பது தொடர்பான தகவலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் எனவும் அதில் ஒரு வீரர் நிச்சயம் அண்கேப்ட் வீரராக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ திட்டமிட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச t20 போட்டியில் ஹர்ஷிப் ராணா, நிதிஷ் ரெட்டி ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்கி இருந்தார்கள்.

இதில் நிதிஷ் ரெட்டிக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் அன்கேப்ட் வீரர் என்பதை இழந்திருக்கின்றார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ஹர்ஷித் ரானா விளையாடவில்லை. இந்தியா இரண்டு போட்டிகளிலும் வென்று விட்டதால் கடைசி போட்டியில் விளையாடாதவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் கடைசி போட்டியிலும் ஹர்ஷித் ராணா விளையாடவில்லை.

காய்ச்சல் என்று கூறி வீடு திரும்பி விட்டதாக தகவல் வெளியானது. அதனால் அவர் இன்னும் அன்கேப்ட் வீரராகவே இருந்து வருகின்றார். இவரை கொல்கத்தா அணி சுலபமாக தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது ஹர்ஷித் ராணாவை கம்பீர் திட்டமிட்டு தான் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார் என்றும், அவருக்கு காய்ச்சல் என்பதை எதை வைத்து உறுதி செய்வது மருத்துவ அறிக்கையும் கிடையாது என்று மற்ற ஐபிஎல் அணி நிர்வாகிகள் பிசிசிஐ இடம் புகார் அளித்துள்ளார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்துவிட்டு இந்தியா அணி பயிற்சியாளராக மாறி இருக்கும் கௌதம் கம்பீர் இன்னும் ஐபிஎல் அணிக்கு உதவி தான் செய்கின்றார் என்று புகார் அளித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா அணியை தவிர மற்ற 9 ஐபிஎல் அணிகளும் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், உண்மை காரணம் என்ன? அவருக்கு உண்மையிலேயே காய்ச்சல் என்றால் மருத்துவ அறிக்கை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை விளையாட வைக்காமல் வீட்டிற்கு அனுப்பியதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் புகார் கூறியிருக்கிறார்கள். இது கௌதம் கம்பீருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

23 mins ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

1 hour ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

1 hour ago

கண்ணை கவரும் மாடல்.. தெறிக்கவிட்ட ஓபன் இயர்பட்ஸ்.. டச் கண்ட்ரோலும் இருக்கு.. எந்த மாடல் தெரியுமா..?

பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும்…

2 hours ago

சொந்த வீடு தாங்க சூப்பர்!…அதிகரித்து வரும் எண்ணிக்கை…

அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…

2 hours ago

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…

2 hours ago