இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதுள்ள வீரர்கள், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஆவர். ஏராளமான இளம் வீரர்கள் அடங்கிய அணி என்ற அடிப்படையில், இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது. தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின் அனைத்து வித போட்டிகளிலும் சுப்மன் கில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவரை தொடர்ந்து இஷான் கிஷன் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இருப்பது, அவரின் ஆட்டத்தில் வெளிப்படுகிறது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் இஷான் கிஷன். முதல் டெஸ்ட் போட்டியில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இஷானுக்கு ஏற்படவில்லை.
எனினும், விக்கெட் கீப்பராக அவரது செயல்பாடு அனைவரையும் சிறப்பாக இருந்ததோடு மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் என்று பலதரப்பட்டோரை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன் கேப்டன் ரோகித் ஷர்மா இஷான் கிஷனை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“இஷான் திறமை மிக்க வீரர் ஆவார். இந்திய அணியின், குறுகிய கால போட்டியில் அதனை நாம் அனைவரும் பார்த்துவிட்டோம். 50 ஓவர்கள் போட்டியில் இஷான் கிஷன் 200 ரன்களை அடித்திருக்கிறார். அவரிடம் கேம் இருக்கிறது, அவரது திறமையை பட்ட தீட்ட வேண்டியது நமது பொறுப்பு. நாம் அவருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.”
“அவர் ஒரு இடது கை வீரர் ஆவார். அவர் அதிரடியாக விளையாட விரும்புகிறார். நான் அவருடன் தெளிவாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டேன், அதில் அணி நிர்வாகம் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை எடுத்துரைத்து இருக்கிறேன். அவருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவரிடம் கேம் இருக்கிறது, அவருக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது, நாங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம்.”
“அவரது விக்கெட் கீப்பிங் பற்றி நிச்சயம் பேசியே ஆக வேண்டும். தனது முதல் போட்டியிலேயே அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அஷ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் வீசும் பந்துகளை கணிப்பது மிகவும் கடினம். அவை வெவ்வேறு திசையில் செல்லும், சில பந்துகள் தரையில் மிகவும் கீழே செல்லும்.. அவரது கீப்பிங் திறமை என்னை கவர்ந்து விட்டது.”
“தவிர்க்க முடியாத காரணத்தால், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க முடியாத சூழல் உருவாகி விட்டது. நாங்கள் டிக்லேர் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். எங்களின் டாப் ஆர்டர் பேட்டர்கள் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர் சிறப்பாக செயல்படுவார்,” என்று தெரிவித்தார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…