தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்நிலயில், 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல்பக்கம் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, 14ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மொத்தத்தில் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக வெப்பநிலை 2 டிகிரி முதல் மைனஸ் 3 செல்சியஸ் என இயல்பை விட அதிகமாக இருக்கும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூட மிதமான மழை பெய்யும். 14ம் தேதி தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…