Categories: Cricketlatest news

வரலாற்று சாதனை படைத்த ஜடேஜா – குல்தீப் யாதவ்.. இதுவரை யாரும் இப்படி செய்ததில்லை..!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த ஜோடி ஒரு போட்டியில் ஏழு விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்திய முதல் இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் எனும் அரிய சாதனையை படைத்தது.

“இந்த ஆடுகளம் சீம் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்றே நினைத்தேன், எங்கள் தரப்பில் நாங்கள் ஏழு விக்கெட்களை வீழ்த்தியது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. களத்தில் ஸ்பின்னிங் இருந்தது, மேலும் பந்து ஒரளவுக்கு பவுன்ஸ் ஆனது. போட்டிகள் இருப்பது எப்போதும் நல்ல விஷயம், ஒருங்கிணைந்து பணியாற்றவே நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்று குல்தீப் யாதவ் போட்டிக்கு பிறகு பேசினார்.

Jadeja-Kuldeep

வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. பார்படோஸ்-இல் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் மூன்று ஓவர்கள் பந்துவீசி வெறும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.

ஆறு ஓவர்கள் பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 37 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி மட்டுமே ஏழு விக்கெட்களை கைப்பற்றியது. இவர்கள் தவிர ஹர்திக் பான்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி துவக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. எனினும், மறுபக்கம் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டே வந்தது. இந்திய பவுலிங்கின் தாக்கம் காரணமாக வெஸ்ட் இன்டீஸ் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Jadeja-Kuldeep-1

பிறகு எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் துவக்க வீரரான இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46 பந்துகளில் 52 ரன்கள் (ஏழு பவுன்டரிகள், ஒரு சிக்சர்) விளாசிய இஷான் கிஷன் பெவிலியனர் திரும்பினார். இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் வெறும் ஏழு ரன்களுக்கு நடையை கட்டினார்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 19 ரன்களையும், ஹர்திக் பான்டியா 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். ரவீந்திர ஜடேஜா 16 ரன்களையும், கேப்டன் ரோகித் ஷர்மா 12 ரன்களை அடித்து 22.5 ஓவர்களில் வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. இந்திய அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்று இருக்கிறது.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

47 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago