Categories: latest newstamilnadu

மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பு?…மேலிட முடிவே…ஜெயக்குமார் கருத்து!…

மது ஒழிப்பு மாநாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கையில் பதாகைகளுடன் வீட்டின் முன்பு கோஷமிட்டு போராடியதை அனைவரும் அறிவர் என்றும்.

Stalin

மது என்பது சமுதாயத்திற்கு மிகப்பெரிய கேடு என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டிருந்தது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டி பேசினார்.

தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது தான் திமுக அரசு செய்த சாதனை என்றும், இது தோழமை கட்சிகளுக்கு இது பிடிக்கவில்லை என்றும், அதன் அடிப்படையில் தான் திருமாவளவன் முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார்.

குரல் கொடுத்தது மட்டுமன்றி நல்ல விஷயத்திற்காக மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் மாநாடு என்பதால் அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக என்பது தவிர்க்க முடியாத மாபெரும் மக்கள் இயக்கம் என்றும் மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் என்பதன் அடிப்படையில் தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்க போவதா?, இல்லையா? என்பது குறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை முடிவு செய்யும் என கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

sankar sundar

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

3 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

39 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

1 hour ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago