அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு நூலிலையில் உயிர் தப்பினார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப் பொதுக் கூட்டத்தில் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
முன்னாள் அதிபர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல் அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “இந்த நாட்டின் அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. இதனை குளிர்விக்கும் நேரம் வந்துவிட்டது.
அரசியல் களம் உண்மையான போர்க்களமாக, கொலைக்களமாக மாறிவிடக்கூடாது. இது சோதனை காலகட்டம். இந்த நேரத்தில் வாக்குப்பேட்டி தான் போர் பெட்டி” என தெரிவித்தார். தேர்தல் பொதுக்கூட்டத்தில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடத்தியவரின் பெயர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விரிவான விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை மீது கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…